headlines

img

முன்மாதிரியான கேரள அரசு

மலையாள திரையுலகில்  பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியில் பெண்கள் துன்புறுத்தப்படுவதை ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி உறுதி செய்துள்ளது. தங்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய அல்லது சுரண்டலில் ஈடுபட்ட ஆண்களின் பெயர்களை பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த குழுவிடம் தெரி வித்துள்ளனர். பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்ததால், அடுத்த நாளே அந்த நடிகையை, துன்புறுத்திய நபருக்கு மனைவி யாக மிக நெருக்கமாக நடிக்கவேண்டும் என்று  கட்டாயப்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

2017ஆம் ஆண்டில்  கேரளாவில்  முன்னணி நடிகையை சக திரைக்கலைஞர் ஒருவரின் துண்டுதலின் பேரில் சிலர் காரில் வைத்து பாலி யல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதைக் கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி யது. பின்னர் சினிமா கலெக்டிவ் என்ற பெயரில் அறக்கட்டளை அமைக்கப்பட்டு, திரையுலகில் பணியாற்றும் பெண்களின் புகார்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கோரி அவ்வமைப்பினர் கேரள முதல்வரிடம் மனு அளித்தனர். இதையடுத்து திரையுலகப் பெண்களின் பிரச்சனைகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டதே நீதிபதி ஹேமா கமிட்டி ஆகும். 

திரைத்துறையைப் பொறுத்தவரை குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் பெரிய நட்சத்திரங்களாகவும்   சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பதால்  தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமைகளை வெளியே சொல்ல முடியாமல் பல பெண் கலைஞர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு  ஹேமா குழுவின் அறிக்கை நம்பிக்கையையும், துணிவையும் கொடுத்துள்ளது. முன்னணி பெண் திரைக்கலைஞர்கள் நிலையை விட மிக மோசமானது பெண் துணை நடிகர்கள் மற்றும் சிகையலங்கார கலைஞர்களின் நிலைமை. “துணை நடிகர்கள் அடிமைகளாகப் பயன்படுத்தப் படுகின்றனர். படப்பிடிப்புத் தளங்களில் அவர்களுக்கு கழிவறை வசதிகூடச் செய்து தரப்படுவதில்லை. காலை 9 மணியில் இருந்து மறுநாள் அதிகாலை 2 மணிவரைகூட அவர்கள் பணிபுரிய வைக்கப்படுவதாக” ஹேமா கமிட்டி அறிக்கை கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியான உடனே, கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு எந்தப் பெண்ணும் காவல் துறையில் புகார் அளித்தால், அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்கும் என  அறிவித்தது. அதன்படி புகாரின் பேரில் முன்னணி நட்சத்திரங் கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப் பட்டுள்ளது. ஹேமா கமிட்டி மூலம் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க கேரள அரசு சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்ஐடி) அமைத்துள் ளது. பெண்கள் மீதான பாலியல் சுரண்டலைத் தடுக்க, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்ட றிந்து கேரள அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும். இந்நிலையில் பாலின நீதிக்கான  நட வடிக்கைக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக பாதிக்கப்பட்டவர்களின் அதிர்ச்சியை அதிகரிக்கும் வகையில் கேரள எதிர்க்கட்சிகள், இப்பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது அருவருப்பானது.