headlines

img

சுதந்திரம் காப்போம்!

நமது இந்திய திருநாடு 78 ஆவது சுதந்திரத்  திருநாளைக் கொண்டாடும் இந்த இனிய நாளில்  அனைவருக்கும் விடுதலைத் திருநாள் நல் வாழ்த்துக்களை தீக்கதிர் தெரிவித்துக் கொள்கி றது. தியாகிகள் போராடிப் பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தையும், அதன் விளைச்சலான ஜன நாயகம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட அரசியல் சட்ட விழுமியங்களையும் பாதுகாக்க சுதந்  திரத் திருநாளில் உறுதியேற்போம்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு  கருத்தோட்டங்களைக் கொண்ட இயக்கங்கள் பங்களிப்புச் செய்துள்ளன. ஆனால் விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு வர்க்க உள்ளடக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமே கொடுத்தது.

விடுதலைப் போராட்டக் களத்தில் பூரண விடுதலை என்ற முழக்கத்தை முதன்முதலில் முன்வைத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகள். சுதந்தி ரப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, தொழிலா ளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள் மற்றும் பழங்குடி மக்களின் வாழ்வாதா ரத்திற்கான போராட்டத்தையும் ஒன்றிணைத்தது பொதுவுடைமை இயக்கம். 

உயிர்த் தியாகம் ஆனாலும், சிறைவாசமானா லும், சித்ரவதைகள் ஆனாலும் அனைத்து வகை யான தியாகங்களிலும் முன்நின்றது விடு தலைக்கான களத்தில் கம்யூனிஸ்ட்டுகளே!

மொழிவழி மாநிலம் என்ற முழக்கத்தை முன்பின் முரணின்றி முன்வைத்தது கம்யூனிஸ்ட்  இயக்கம். நாடு விடுதலை பெற்ற பிறகு, தொழிலா ளர்கள், விவசாயிகள் உரிமைகளைப் பாதுகாத்திட வும், பொதுத்துறை நிறுவனங்களைப் பாதுகாக்க வும், மாநில உரிமைகளையும், மொழி சமத்து வத்தையும், அதே நேரத்தில், இந்திய ஒருமைப் பாட்டையும் பாதுகாத்திடவும் அயர்வில்லாத போராட்டத்தை கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்தி வந்துள்ளது; வருகிறது.

விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்காத, இன்னும் சொல்லப்போனால், அந்நிய ஏகாதி பத்தியத்திற்கு துணைநின்ற ஒரு கூட்டத்தின் கையில், ஒன்றிய ஆட்சிப் பொறுப்பு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கியுள்ளது. ஜனநாய கம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி உள்ளிட்ட அர சியல் சட்ட மாண்புகள் சிதைக்கப்படுகின்றன. பன்முகத் தன்மைதான் இந்தியாவின் பேரழகு. ஆனால், அதைச் சிதைத்து அனைத்திலும் ஒற்றைத்  தன்மையை திணிப்பதற்கான முயற்சிகள் மூர்க்க மாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

நாடாளுமன்ற ஜனநாயகம் கூட கேள்விக் குள்ளாக்கப்படுகிறது. இந்திய விடுதலை என்பது, நாட்டு மக்கள் அனைவருக்கும் பொது வானது. ஒவ்வொருவராலும் அது உணரப்பட வேண்டும். விடுதலைக்காகப் போராடிய நம் முன்னோர்களின் தியாகத்தை இந்நாளில் நினைவுகூர்ந்து, சுதந்திரத்தைக் காத்து நிற்க உறுதியேற்போம்!