headlines

img

பாஜக அரசை வீழ்த்துவதே உடனடி வர்க்கக் கடமை

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டுகள் ஆன பிறகும் தொழிலாளர்களும், விவசாயிக ளும், விவசாயத் தொழிலாளர்களும் அடிப்ப டைக் கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய நிலையில் உள்ளனர்.   கோரிக்கைகளை உறுதி செய்வதற்குப் பதி லாக, ஒன்றிய பாஜக அரசு, பல ஆண்டுகளாக தொழிலாளர்கள்  போராடிப் பெற்ற அனைத்து உரிமைகளையும் பறித்து வருகிறது. அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட அனைத்து அத்தி யாவசியப் பொருட்களின் விலையும் தாறு மாறாக உயர்ந்துள்ளது.

முதல்முறையாக அத்தி யாவசிய உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. ‘அமிர்த காலத்திற்கு’ இந்தியாவை அழை த்துச்செல்கிறோம் என்ற பெயரில் போலிப் பெருமை பேசும் ஆட்சியாளர்கள்,  பட்ஜெட்டில் உணவு மானியத்தை கணிசமாக வெட்டியுள்ள னர். வேலையில்லா திண்டாட்டம் முன்னெப் போதும் இல்லாத உச்சத்தில் உள்ளது. நிரந்தர வேலைகள் அழிந்து வருகின்றன. அரசு மற்றும் பொதுத்துறை வேலைகள் கூட ஒப்பந்தம் மற்றும் அவுட்சோர்ஸிங் செய்யப்படுகின்றன.  இதனால் முழு நிர்வாக அமைப்பும் தனியார்மயமாக்கப் படுகிறது.  100 நாள் வேலைத் திட்டத்தின்  கீழ் வேலைக் கான தேவை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலை யில், அரசாங்கம் அதற்கான ஒதுக்கீட்டை மேலும் கடுமையாக குறைத்துள்ளது.

வேலையில் இருப் பவர்களுக்கு, எட்டு மணி நேர வேலை, குறைந்த பட்ச ஊதியம், சமூகப் பாதுகாப்பு மற்றும் சங்கம் சேரும் உரிமை போன்ற சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்படுகின்றன. மோடி அரசால் இயற்றப் பட்ட நான்கு தொழிலாளர் சட்டங்கள் சட்டப்பூர்வ மாகவே இந்த உரிமைகளைப் பறிக்கிறது.  விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. உரம், விதை, பூச்சிக் கொல்லி மருந்து உள்ளிட்ட இடுபொருட்களின் செலவு அதிகரித்து வருவதால், சிறு மற்றும் நடுத் தர விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்படுகி றார்கள். விவசாயத்தில் வேலை வெகுவாக குறைந்துள்ளதால், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் வேலை தேடி நகரங்க ளுக்கு இடம்பெயர்வது அதிகரித்துள்ளது.  

இந்தநிலையில் வாழ்வாதாரக் கோரிக்கை களை வலியுறுத்தி நாடு முழுவதும் வெள்ளி யன்று (பிப்.16)  வேலைநிறுத்தம், மறியல் என மகத்தான போராட்டத்தை நடத்தி இந்திய தொழி லாளர்- விவசாயிகள் வர்க்கம் மோடி அரசுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் செய்யாததை இனியும் மோடி அரசு செய்யப்போவதில்லை. எனவே வரும் மக்க ளவைத் தேர்தலில் பாஜக அரசை தோற்க டிப்பதே இந்த வர்க்கத்தின் தலையாய கடமை யாக இருக்க வேண்டும்.