நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசின் விவசாய விரோதப் போக்கை கண்டித்து 2020ஆம் ஆண்டில் விவசாயிகள் நடத் திய போராட்டம் இந்தியாவில் மட்டுமின்றி உலக ளவில் பெரிதும் பேசப்பட்டது. விவசாயிகளின் ஒன்றுபட்ட, நீடித்த போராட்டத்தின் காரணமாக நாடாளுமன்றத்தில் மோடி அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்தப் போராட்டத்தை உடைக்க ஆளும் பாஜக மேற்கொண்ட அணுகுமுறை மிகவும் இழிவான ஒன்று. போராடும் விவசாயிகள் மீது அளவற்ற அவதூறுகள் அள்ளி வீசப்பட்டன. மறுபுறத்தில் துப்பாக்கிச்சூடு, தடியடி உள்ளிட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தலைநகரை நோக்கி விவசாயிகள் வருவதை தடுக்கக்கூட பல முயற்சிகள் நடந்தன. ஆனால் அனைத்தையும் மீறி விவசாயிகள் தங்களுக்கே உரிய கண்ணியத்தோடு அந்தப் போராட்டத்தை நடத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட பல்வேறு கட்சிகள் அந்தப் போராட்டத் திற்கு உறுதுணையாக நின்றன. அகில இந்திய விவ சாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளின் தலை மையேற்பும், வழிகாட்டுதலும் போராட்டத்தை வலிமையோடு நடத்திச் செல்ல வழிவகுத்தன.
ஆனால் இப்போதும் கூட விவசாயிகள் போ ராட்டத்தின் வெற்றியை பாஜகவினால் சகித்துக் கொள்ளமுடியவில்லை. அந்தக் கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினரான கங்கனா ரணாவத் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் வகையில் பேட்டியளித்துள்ளார். இந்தப் போராட்டத்தின் போது தூக்கில் போடுதல், பாலி யல் வன்கொடுமை போன்றவை நடந்ததாகவும், அந்தப் போராட்டம் நடந்ததற்கு வெளிநாட்டு சதி தான் காரணம் என்றும் கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசுவது இது முதன்முறையல்ல. வரம்பு மீறி இவர் வார்த்தையா டுவதும் கண்டனம் எழுந்தால் பாஜக இது அவரது சொந்தக்கருத்து என நாடகமாடுவதும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. இப்போதும் பாஜக தலைமை, கங்கனா ரணாவத்தின் கருத்தை தாங்கள் ஏற்கவில்லை என்றும், இது அவரது சொந்தக் கருத்து என்றும் பம்மாத்து செய்கிறது. இதை விட மோசமாக போராட்டக் காலத்தில் பாஜகவினர் பேசியது உண்டு.
போராட்டத்தின் போது விவசாயிகள் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்பதோடு, வேளாண் விளை பொருளுக்கு கட்டுப் படியான விலை வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அதில் ஒன்றைக்கூட பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு நிறைவேற்றவில்லை. தொடர்ந்து விவசாயி களை வஞ்சிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ள மோடி அரசு அந்த திருத்தச் சட்டத்தில் இடம் பெற்றி ருந்த அம்சங்களை மறைமுகமாக நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் உள்ள கோடானுகோடி விவசாயிகள் பாஜகவுக்கு உரிய பாடத்தை கற்றுத் தருவார்கள்.