2019-ம் ஆண்டு ஹரியானா மாநில சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்த முள்ள 90 இடங்களில் பா.ஜ.க 41 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றிபெற்றன. பெரும்பான்மைக்கு கூடுதலாக 5 இடம் தேவைப்பட்ட நிலையில், 10 இடங்களில் வெற்றி பெற்றிருந்த முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பேரனும் ஜனநாயக ஜனதா கட்சி (ஜேஜேபி) தலைவருமான துஷ்யந்த் சவுதாலா வுக்கு துணை முதல்வர் பதவி ஆசை காட்டி வளைத்தது பாஜக.
இந்தநிலையில், எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தையில் பாஜக- ஜேஜேபி இடையே மோதல் ஏற்பட்டதால், கூட்டணி முறிந்துள்ளது. துணை முதல்வரான துஷ்யந்த் ராஜினாமா செய்தார். இதனால் கட்டார் தலைமையிலான பாஜக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கட்டார் ராஜினாமா செய்து, சில சுயேச்சைகளை விலைக்கு வாங்கி, புதிய முதல்வராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரும் குருக்ஷேத்ரா எம்பியுமான நயாப் சிங் சைனியை நியமித்து, ஆட்சியைத் தக்கவைத்துள்ளது பாஜக.
ஒன்றிய அரசின் மக்கள் விரோத, விவசாயி கள் விரோத கொள்கைகளால் பாதிக்கப்பட்ட வர்கள் அந்த கட்சிக்கு பாடம் கற்றுத்தர காத்தி ருக்கிறார்கள். விவசாயிகள் நிறைந்த ஹரியானா மாநிலத்திலும் பாஜகவுக்கு எதிரான அலை பலமாக வீசுகிறது. எனவேதான் ஆட்சி யைத் தொடர சுயேட்சைகளிடமிருந்து ஆதரவு கிடைத்தபோதிலும் முதல்வரை பாஜக மாற்றி விட்டது. இதுவரை முதல்வராக இருந்த மனோகர் லால் கட்டார் வேளாண் சட்டங்க ளுக்கு எதிராக விவசாயிகள் போராடியபோதும் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ கோரிக்கைகளை வலியுறுத்திய போதும் காவல் துறையை கொண்டு கடுமையான அடக்கு முறையை ஏவியவர். எனவேதான் ஆளும்கட்சி க்கு எதிரான அலையை எதிர்கொள்ள முதல்வர் மாற்றம் பாஜகவுக்கு தேவைப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் 10 இடங்களில் வெற்றிபெற்ற பிறகும், 4 ஆண்டு களுக்கு முன்பு ஜேஜேபி ஆதரவுடன் ஆட்சி யைத் தக்கவைத்த போதும் தற்போது தேர்தலை எதிர்கொள்ள பாஜகவுக்கு துணிச்சல் இல்லை. இப்போது அக்கட்சிக்கு கிடைத்திருக் கும் துருப்புசீட்டு ‘ஓபிசி அரசியல்’ புதிய முதல மைச்சரை இதர பிற்படுத்தப்பட்ட மக்களின் முகமாக மாற்றுவதன் மூலம், தனது கடந்த கால தவறுகளையும் விவசாயிகளுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட அடக்குமுறைக ளையும் அக்கட்சி மறைக்கப் பார்க்கிறது. பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான கட்சி பாஜக என மக்களை நம்பவைக்க முயற்சிக்கிறது.