ஜூலை 7- ல் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கட்சித் தலைமைப் பதவியில் இருந்து ராஜினாமா செய்து பத்து நாட்களாகிவிட்டன. அவர் “போய்விட்டார்; ஆனால் போகவில்லை” என்று கார்டியன் பத்திரிகை தலைப்பு போட்டது போலவே, பிரதமர் பதவியில் ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறார். அவரது கன்சர்வேட்டிவ் கட்சி அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் வரை போரிஸ் ஜான்சன் பதவியில் நீடிப்பார். அக்டோ பரில் கன்சர்வேட்டிவ் கட்சியின் மாநாடு நடை பெறுகிறது. அதற்கு முன்னதாக புதிய பிரதமர் பதவியேற்பார் என்று தெரிகிறது.
கடந்த சில மாதங்களில் போரிஸ் ஜான்சன் அரசு பல ஊழல்கள் புரிந்ததாக குற்றம்சாட்டப் பட்டது. கிரிஸ் பின்செர் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீது பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இவர் துணை தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டார். இதற் காக போரீஸ் ஜான்சன் மன்னிப்பும் கேட்டார்.
பிரிட்டனில் பண வீக்கம் உயர்ந்து வருகிறது. வாழ்க்கை செலவினங்கள் கூடியதால் கோடிக் கணக்கான மக்களால் உணவு, எரிபொருள் போது மான அளவு வாங்க முடியவில்லை. கொரோனா எதிர்ப்பிலும் பிரிட்டன் கோட்டைவிட்டது; காரணம், பொது சுகாதாரம், தேசிய சுகாதார சேவை தவறாக நிர்வகிக்கப்பட்டன. ஊரே பொது முடக்கம் ; ஆனால் பிரதமர் வீட்டில் மது விருந்து. ‘பார்ட்டி கேட் ஊழல்’ என அழைக்கப்படும் இந்த ஊழலும் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் கடும் கோபம் கொண்டனர். இந்தப் பின்னணியில்தான் ஜூன் மாதம் நாடாளுமன்றத்தில் வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது 40 சதவிகிதம் ஆளும் கட்சி எம்.பி-க்களே அரசுக்கு எதிராக வாக்க ளித்தனர். சாதாரண தொழிலாளர் செலுத்த வேண்டிய வரிகள் உயர்த்தப்பட்டன. அரசின் சிக்கன சீரமைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப் பட்ட தொழிலாளர்கள் அலை அலையாக போராடுவதை இப்போதும் காண முடிகிறது. உக்ரைன் யுத்தம் காரணமாக பொருள்கள் சப்ளை பிரச்சனை உள்ளது. இதனால் உணவு பொருள்கள் மற்றும் எரிசக்தி விலைகள் கடுமை யாக கூடியுள்ளன. வீடுகளில் மின்கட்டணம், எரி பொருள் கட்டணம் இந்த ஆண்டு துவக்கத்தி லிருந்து 50% கூடிவிட்டது. வீட்டு வாடகைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதனிடையே, ரயில்வே தொழிலாளர்களின் நான்கு நாட்கள் வேலை நிறுத்தம் ஊதிய உயர்வு கோரி நடைபெற்றது. தேசிய சுகாதார சேவை தொழிலாளர், ஆசிரியர்கள், டாக்டர்கள் உட்பட பல பகுதியினரும் வேலைநிறுத்தம் செய்யப் போவ தாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். செவிலியர் களுக்கு 3-5 சதவிகித ஊதிய உயர்வு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒன்பது சத விகிதம் என்ற பணவீக்கத்தை ஒப்பிடும்போது ஊதிய உயர்வு மிகக் குறைவு. கன்சர்வேட்டிவ் கட்சி யின் புதிய பிரதமர், புதிய ஆட்சி வந்தாலும் மக்களின் வாழ்நிலைகளில் எந்த மாற்றமும் வராது.
பிரதான எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி யில் முற்போக்குத் தலைவரான ஜெர்மி கோர்பை னை, அக்கட்சியில் உள்ள பழமைவாதிகள் தனி மைப்படுத்தி உள்ளனர். எனவே தொழிலாளர் கட்சி ஆட்சி அமைந்தாலும் அரசின் பொருளா தாரக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படாது.