பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளுக்கு பாஜகவின் ஒன்றிய அரசும், குஜராத் அரசும் “உதவியாகவும், உடந்தையாகவும்” இருந்தி ருக்கிறது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது. இந்திய வரலாற்றில் இது போன்ற கொடூரத்திற்கு எந்த அரசும் இப்படி உடந்தையாக இருந்தது இல்லை. 2002 குஜராத் இனப்படுகொலையின் ஒரு பகுதியான பில்கிஸ் பானு வழக்கில் ஏற்கெனவே உச்சநீதிமன்ற தலையீட்டிற்குப் பின்னர்தான் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.
ஆனால் 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத் தன்று ஒன்றிய மோடி அரசும், குஜராத் அரசும் இணைந்து விடுதலை செய்து தனது கூட்டாளிக ளைக் காப்பாற்றியது. நீதி குழிதோண்டிப் புதைக்கப்பட்டது. 2002இல் குஜராத் கலவரத்தின் போது, 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு சங்பரிவார் கும்பலால் பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட் டார். அவரது மகளும் கொல்லப்பட்டார். இந்த கொ டூரத்தை அரங்கேற்றிய கும்பலுக்கு பாஜக அரசு ஆரம்பம் முதலே உடந்தையாக இருந்தது.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் அம்பலமாகியிருக்கிறது. இந்த குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில், குஜராத் அரசு இறந்தவர்களின் உடல் களை முறையற்ற விதத்தில் பிரேதப் பரி சோதனை செய்திருக்கிறது. அடையாளம் தெரி யாத வகையில் இறந்தவர்களின் தலையையும் துண்டித்திருக்கிறது; இதில் அரசின் சார்பில் இரண்டு மருத்துவர்களும், 5 காவல்துறையின ரும் பங்கேற்றிருக்கின்றனர் என சிபிஐ தனது குற்றப்பத்திரிகையில் தெரிவித்திருக்கிறது. மேலும் குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யன் பகவான்ஷா தண்டனையைக் குறைக்கச் சொல்லி குஜராத் உயர்நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்த போது அது நிராக ரிக்கப்பட்டது.
மேலும் தண்டனையைக் குறைக் கும் அதிகாரம் மகாராஷ்டிரா அரசுக்கே உண்டு என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதே போல் ஏற்கனவே மகாராஷ்டிரா அரசுக்கு கூட்டு மன்னிப்பு கேட்டு தண்டனையைக் குறைக்கக் கோரிய போது, மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதி, சிபிஐ கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரி கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையெல்லாம் மேல்முறையீட்டின் போது, குற்றவாளிகளுடன் இணைந்து குஜராத் பாஜக அரசும் திட்டமிட்டு மறைத்திருப்பது தற்போ தைய தீர்ப்பில் அம்பலமாகியிருக்கிறது. ஆக. 2002 அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் குஜராத் பாஜக அரசுதான் முதன்மைக் குற்றவாளி என மீண்டும் நிரூபணமாகியிருக்கி றது.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் மூன்றாவது முறையாகத் தலையிட்டு நீதியை நிலைநாட்டி யிருக்கிறது. இது தற்காலிக தீர்வுதான். அரசியல் ஆதாயங்களுக்காக நீதியைக் கொல்லும் பாஜக வை அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்தால் மட்டுமே, சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாய கத்தையும் பாதுகாக்க முடியும்.