உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் நாளுக்குநாள் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. தமிழ கத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை துவங்கிவிட்டது என்று மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித் துள்ளார். முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடவ டிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் இன்னும் பத்து நாட்களில் பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
இந்தநிலையில் 15 வயதிற்கு மேற்பட்டோ ருக்கு தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் திங்களன்று துவக்கி வைத்துள்ளார். இந்தியா முழுவதும் இந்த இயக்கம் துவங்கியுள் ளது நல்லதொரு நடவடிக்கையாகும். சிறார்கள் மற்றும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை இன்னும் முன்னதாகவே துவக்கியிருக்க வேண்டும் என்ற கருத்து சுகாதாரத்துறை நிபுணர்களால் முன் வைக்கப்படுகிறது.
மறுபுறத்தில் 15 வயதிற்கு மேற்பட்ட அனைவ ருக்கும் இன்னமும்கூட இரு தவணை தடுப்பூசி செலுத்தாத நிலை உள்ளது. எனவே இரு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்துவ தோடு 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை இயன்றவரை விரைவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தை பொறுத்தவரை 86.22 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 58.82 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தமாக இதுவரை 8.39 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
உருமாறிய டெல்டா வைரசும், ஒமைக்ரான் வைரசும் சேர்ந்து சுனாமி அலைபோல உலகில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித் துள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும். கடந்த இரண்டு அலைகளின் போது ஏற்பட்ட நெருக்கடி கள், இடர்பாடுகள் முற்றாக தவிர்க்கப்பட வேண் டும். தமிழக அரசு இந்த இடைக்காலத்தில் மருத்துவ மற்றும் பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்தி உள்ள போதும், மருத்துவர் மற்றும் மருத்துவப் பணி காலியிடங்கள் நிரந்தர பணி என்ற அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும்.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் அத்தியாவசிய மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த முறை போல தற்காலிக மருத்துவ முகாம்களை தயார் நிலையில் வைத்தி ருக்க வேண்டும்.
முகக்கவசம் அணிவது, தனி மனித இடை வெளியை பேணுவது, சானிடைசர் பயன்படுத்து வது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட வேண்டும். பெருமளவில் கூட்டம் கூடும் நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். இதை அறிவுறுத்தக்கூடிய நிலையில் உள்ள அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முன் உதாரணமாக அமைந்திட வேண்டும்.
கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாவது அலையால் மக்கள் பெரும் இன்னலை சந்தித் துள்ளனர். மூன்றாவது அலையால் உயிரிழப்புக ளை தடுப்பது மட்டுமின்றி உரிய நிவாரணங்களை யும் அளித்திட வேண்டும்.