headlines

img

கண்ணியத்தை மீட்கும் முயற்சி!

கண்ணியத்தை மீட்கும் முயற்சி!'

‘காலனி’ என்ற சொல் அரசு ஆவணங்களில் இருந்து அகற்றப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு, வெறும் சொல் மாற்றத்திற்கு அப்பாற்பட்ட, பரந்த அர்த்தத்தைக் கொண்ட ஒரு முக்கியமான நடவடிக்கையாகும். இது அரசு நிறு வனங்கள் மற்றும் பொது இடங்களில் இருந்து தீண்டாமையின் ஒரு வடிவத்தை அகற்றும் உறுதியான செயல் மட்டுமல்ல; பட்டியலின மக்க ளின் கண்ணியத்தை மீட்டெடுக்கும் ஒரு சமூக வியல் முயற்சியாகவும் இருக்கிறது.

இந்தச் சொல்லை கேரள மாநிலத்தில் இடது ஜனநாயக முன்னணி அரசு ஏற்கெனவே அரசு ஆவணங்களில் இருந்து அகற்றியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

‘காலனி’ (Colony) என்பது லத்தீன் மூலச்சொல்லி லிருந்து வந்ததாகும். ‘வலுவான ஓர் அந்நியநாட்டி னால் கைப்பற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்’ என்பது இதன் பொருள். சுதந்திரத்திற் குப் பிறகும், இந்திய சமூகச் சூழலில்,  கிராமப்புறங்க ளில், ‘காலனி’ என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களை ஊரின் ஓரமாகத் தனியாக தனிமைப்படுத்தும் தீண்டா மையின் நேரடி அடையாளமாக வேரூன்றியது.

குறிப்பாக பட்டியலின மக்களுக்கான குடி யிருப்புப் பகுதிகள் ‘காலனிகள்’ என அழைக்கப் பட்டதன் மூலம், அவர்கள் சமூகத்தின் பிரதான நீரோட்டத்திலிருந்து திட்டமிட்டு விலக்கி வைக் கப்பட்டனர். இந்தச் சொல், வெறும் புவியியல் அடையாளமாக மட்டுமின்றி, பாகுபாட்டின் உள வியல் முத்திரையாகவும், அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்திருந்த தனிமையின் அடையாள மாகவும் இருந்தது. அது அவர்களை ‘மற்றவர் கள்’ எனும் சமூகப் பிரிவுக்கு தள்ளி, ஒருவகை யான ஒதுக்குமுறையை நிலைநாட்டியது.

காலனி’ எனும் வார்த்தை பாகுபாட்டின் குறி யீடாகவும், உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்வின் சாட்சியாகவும் இருந்தது. மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல; அது சமூக உறவு களையும், அதிகார அமைப்புகளையும் பிரதி பலிக் கும் சக்தியாகவும், அவற்றை உருவாக்கும் கருவி யாகவும் செயல்படுகிறது. எனவே, பொது வெளி யில் பயன்படுத்தப்படும் மொழியை மாற்றுவது, சமூக மாற்றத்திற்கான முக்கியமான படியாகும்.

அதே நேரத்தில் தீண்டாமை என்பது சொற்க ளில் மட்டும் இல்லை என்பதையும் உணர வேண்டும். அது நம் சமூகத்தின் ஆழமான அடுக்கு களில் வேரூன்றியுள்ளது. எனவே, பட்டியலின மக்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல், கல்வி வாய்ப்புகளை விரிவாக்குதல், நிலச் சீர் திருத்தம் மற்றும் தீண்டாமைக்கு எதிரான சட்டங்க ளைத் தளர்வின்றி அமல்படுத்துதல் போன்ற திட்டங்களை தீவிரப்படுத்தவேண்டும்.

இதனுடன், இன்னும் மிஞ்சியிருக்கும் சாதிய அடிப்படையிலான இழிவூட்டும் வார்த்தைகளை கண்டறிந்து அவற்றையும் அகற்றும் பணிகள் தொடரவேண்டும். சாதி ஆணவக் கொலை களை தடுக்க சிறப்புச்சட்டம் கொண்டு வரப்பட வேண்டிய தேவை இருக்கிறது.

உண்மையான மாற்றம் என்பது சொற்களில் மட்டுமல்ல; நடைமுறை வாழ்க்கையில் அனை த்து மக்களுக்கும் சமத்துவமும், கண்ணியமும் உறுதி செய்யப்படும் போதுதான் நிகழும்.