headlines

img

அடுப்பை அணைக்கும் கொடூர விலை உயர்வு

சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து சென்னை யில் சமையல் எரிவாயு விலை ரூ.1,015.50 ஆக அதிர்ச்சிதரும் வகையில் உயர்ந்துள்ளது. பெட் ரோல், டீசல் விலை உயர்வு, அனைத்து அத்தியா வசிய பொருள்களின் விலையும் கடுமையாக உயர்வு, அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் விலையேற்றம், சுங்கக் கட்டண உயர்வு என  விழி பிதுங்கி நிற்கும் மக்களின் தலையில் மற்றும் ஒரு பேரிடியாக இதுஅமைந்துள்ளது.

ஒன்றிய பாஜக கூட்டணி அரசு சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தையே தொடுத்துள்ளது. 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்த்தப் பட்டுக் கொண்டே இருக்கிறது. தேர்தல் முடிந்த  பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்ட போதும் மீண்டும் சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தப் பட்டுள்ளது. 

கடந்த ஓராண்டில் மட்டும் சமையல் எரிவாயு  10 தவணைகளில் ரூ.305 அளவுக்கு உயர்த்தப் பட்டுள்ளது. அதாவது ஒரே ஆண்டில் 44 சதவீதம்  அளவுக்கு சமையல் எரிவாயு விலை உயர்த்தப் பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களுடைய குடும்ப  பட்ஜெட்டில் மட்டுமல்ல, நடுத்தர மக்களின்  குடும்ப பட்ஜெட்டிலும் பெரும் இடைவெளியை சமையல் எரிவாயு விலை உயர்வு ஏற்படுத்தி யுள்ளது. 

சமையல் எரிவாயு விலை மக்கள் வாங்கும் சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்ப தற்காக ஒன்றிய அரசு மானியம் வழங்கி வந்தது. இதனால் அதிகபட்சமாக சிலிண்டர் விலை ரூ.400  வரை இருந்தது. 2018ஆம் ஆண்டில் ஒரு சிலிண் டருக்கு ரூ.435 அளவுக்கு மானியம் வழங்கப் பட்டது.

மோடி அரசு உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பெயரில் சமையல் எரிவாயுக்கான மானி யத்தை நுகர்வோரின் வங்கிக் கணக்கிலேயே செலுத்துவதாக அறிவித்தது. ஆரம்பத்தில் மானி யம் ஓரளவு செலுத்தப்பட்ட போதும் அது படிப் படியாக குறைக்கப்பட்டு தற்போது சிலிண்டருக்கு  ரூ.24.95 என்ற அளவிலேயே தரப்படுகிறது. இது மக்களை ஏமாற்றும் அப்பட்டமான மோசடி. இதுதான் மோடி அரசின் வெளிப்படையான, நேர்மையான, டிஜிட்டல் நிர்வாகமா?

இந்த லட்சணத்தில் மக்களுக்கான பயன் அனைத்தும் நேரடியாக முறைகேடின்றி சென்று விடுவதாக பிரதமர் மோடி வாய்ப்பந்தல் போடு கிறார். மானியத்தை வெட்டுவதாக அறிவிக்கா மலேயே குறைப்பது நியாயமா? உரமானியம் உட்பட அனைத்து விசயங்களிலும் இப்படித்தான்  மோடி அரசு நடந்து கொள்கிறது. 

பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்றவற்றால் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரம் நொறுங்கிக் கிடக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு அனைத்து பொருள்களின் விலை யையும் ஏற்றிவிடுகிறது. இந்த நிலையில் வீட்டு அடுப்பை அணைக்கும் வகையில் மோடி அரசு சமையல் எரிவாயு விலையை தொடர்ந்து உயர்த்தி வருவது கொடூரமான செயலாகும். எனவே சமையல் எரிவாயு விலையை குறைப்ப தோடு மானியத்தை முழுமையாக வழங்கிடவேண் டும். இந்த அநியாய விலை உயர்வுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.