headlines

img

நீதியில்லாத நிதிநிலை அறிக்கை

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை வஞ்சிப்ப தாக அமைந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் பெயர் கூட நிதிநிலை அறிக்கை யில் இடம்பெறவில்லை என்று இந்தியா  கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் குற்றம்சாட்டிய தோடு அவையிலிருந்து வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன் அனைத்து மாநிலங்களின் பெயர் களும் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று அவசியம் இல்லை என்று ஆணவமாக பதிலளித்துள்ளார். பாஜக பெரும்பான்மை பெறாத நிலையில் தெலுங்குதேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன்தான் ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

இதற்கு நன்றிக்கடனாகவும், கூட்டணிக் கட்சிகளை தாஜா செய்யும் வகையிலும், ஆந்திர மாநிலத்திற்கு 15ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி யும் பீகாருக்கு மட்டும் வெள்ளத்தடுப்பு பணி களுக்காக 11ஆயிரத்து 500 கோடியும் ஒதுக்கப் படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களின் பெயர்களும் சிறப்பாக நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருப்பதன் பின்னணி என்ன?

தமிழகம் தொடர்ச்சியாக இயற்கைப் பேரிட ரால் பாதிக்கப்பட்டு வந்த போதும் நரேந்திர மோடி அரசு வன்மத்துடன் தொடர்ந்து வஞ்சகம்  செய்து வந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு புயல் மற்றும் வெள்ளத்தால் ரூ.37ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வெறும் 277 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் ஒரு பைசா கூட ஒதுக்கப் படவில்லை. இது பாரபட்சமின்றி வேறென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடதுஜனநாயக முன்னணி ஆளும் கேரள மாநிலத்தை நரேந்திர மோடி அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. கர்நாடக மாநிலத்திற்கும் இந்த பட்ஜெட்டில் உரிய நிதி  ஒதுக்கீடு இல்லை. பாஜக ஆளும் உ.பி. மாநிலம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவை காலை வாரி விட்டதால் அந்த மாநிலத்தையும் மோடி அரசு புறக்கணித்துள் ளது. இதுவரை இருந்த எந்தவொரு ஒன்றிய அர சும் இந்த அளவுக்கு வன்மத்துடன் நடந்து கொண்டது இல்லை. 

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை பெற முடியாத அளவுக்கு மோடி அரசை இந்திய  வாக்காளர்கள் புறக்கணித்தனர். அதற்கு பழி வாங்கும் வாய்ப்பாக நிதிநிலை அறிக்கையை மோடி அரசு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இந்தப் போக்கு தொடருமானால் நாட்டின் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குறியாகும். ஒட்டுமொத்த இந்தியாவும் மோடி அரசை எதிர்த்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப் பட்டுள்ளது.