games

img

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்.... பிரியா மாலிக் தங்கம் வென்றார்....

புடாபெஸ்ட்:
ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்டில் உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஜுனியர் லெவலுக்கும் முந்தையலெவலே கேடட் லெவல் என அழைக்கப் படும். 

இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை பிரியா மாலிக்  73 கிலோ பிரிவில் களமிறங்கினார். இவரை எதிர்த்து பெலாரஸ் நாட்டின் செனியா படபோவிச் போட்டியிட்டார். தொடக்கம் முதலேஆவேசமாக செயல்பட்ட மாலிக் ஆட்டத்தின் அடுத்தடுத்து புள்ளிகளை  சேர்த்து முன்னிலை பெற்றார்.  பெலாரஸ் நாட்டு வீராங்கனையால் பிரியா மாலிக்கை வீழ்த்தி ஒரு புள்ளிகளை கூட பெறமுடியவில்லை. இதனால் ஆட்டத்தின் முடிவில் 5-0 என்ற கணக்கில் பிரியா வெற்றிபெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 

டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம் கூட கிடைக்காமல் உள்ள நிலையில் பிரியா மாலிக் தங்கம் வென்றிருப்பது இந்தியமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீராங்கனை பிரியா மாலிக்கிற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மல்யுத்த பூமியான ஹரியானாவிலிருந்து வந்தவரே பிரியா மாலிக். 2019-ம் ஆண்டு நடைபெற்ற கேலோ இந்தியா தொடரிலும் தங்கம் வென்றிருந்தார். பள்ளி அளவிலான போட்டிகள் மற்றும் சிறுசிறு தொடர்களில் சிறப்பாக ஆடிய பிரியா மாலிக்கிற்கு இதுதான் முதல் பெரிய வெற்றி ஆகும்.

;