games

img

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய வீரர் சஞ்சீத்

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சித் தங்கம் வென்றார்.

2021 ஆம் ஆண்டிற்கான  ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியிகள் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 91 கிலோ எடை பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் சஞ்சீத் 4-1 என்ற கணக்கில் கஜகஸ்தான் வீரர் வாசிலி லிவிட்டை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார்.

மேலும் 52 கிலோ எடை பிரிவின் இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான இந்தியாவின் அமித் பன்ஹால் 2-3 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் ஷகோபிடின் ஜோய்ரோவிடம்  தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் வென்றார். அதனைத் தொடர்ந்து 64 கிலோ எடைப் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா 2-3 என்ற கணக்கில் மங்கோலியாவின் பாதர்சுக் சின்ஜோரிக்கிடம் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.   இதன் மூலம் 2 தங்கம் உட்பட 18 பதக்கங்களுடன் தனது முந்தைய சாதனையை இந்திய அணி முறியடித்துள்ளது. கடந்த முறை இந்தியா 13 பதக்கங்கள் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.pj;

;