43 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைத்த இந்தியா
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது கிடையாது. 1979-ஆம் ஆண்டுக்கு முன்னர் தாமஸ் கோப்பையில் இன்டர் ஸோனல் ஃபைனல்ஸில் (INTER ZONAL FINALS) இந்தியா 3 வெண்கலம் வென்றிருந்தது. அதன் பின்பு தாமஸ் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் தகுதி சுற்று முறை 1979-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. அன்று முதல் 43 ஆண்டுகள் வரை இந்தியா பதக்கம் வென்றதில்லை. ஏன் அரையிறுதி வாய்ப்பை கூட பெற்ற தில்லை. நடப்பாண்டில் காயம் மற்றும் பார்ம் பிரச்சனையில் சிக்கித் தவித்த இந்தியா உபர் கோப்பையில் சொதப்பியது. இதனால் தாமஸ் கோப்பை பற்றி இந்திய ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. தனது அதிரடி மூலம் 1979-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது இந்தியா.
29-வது சீசன் தாமஸ் கோப்பை பேட்மிண் டன் தொடர் தாய்லாந்து நாட்டின் முக்கிய நகரான நொந்தாபுரியில் நடை பெற்று வரும் நிலையில், இந்த தொடர் தற்போது இறு திக்கட்டத்தை எட்டியுள்ளது. உபர் கோப்பையில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, தாமஸ் கோப்பையில் திடீரென உத்வேகம் பெற்று முதல் முறையாக இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இறுதியில் பலமிக்க நடப்பு சாம்பியன் இந்தோனேசி யாவை இந்தியா எதிர்கொள் கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
சாம்பியன்ஸ்
தாமஸ் கோப்பை தொட ரில் அதிகபட்சமாக இந்தோ னேசியா 14 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. சீனா 10 முறையும், மலேசியா 5 முறையும், ஜப்பான், டென்மார்க் தலா ஒரு முறையும் கோப்பையை கைப்பற்றியுள்ளது. கடந்த சீசனை இந்தோனேசியா தான் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.