games

img

இந்தியா ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீகாந்த் உட்பட 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று  

இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டியில் விளையாடும் ஸ்ரீகாந்த் உட்பட 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தில்லியில் இந்தியா ஓபன் பேட்டி நடைபெற்று வருகிறது. இதில் கிடாம்பி ஸ்ரீகாந்த் உட்பட 7 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வீரர்கள் மற்றும் அவர்களது இரட்டையர்  போட்டியிலிருந்து விலகப்பட்டுள்ளனர் என்று உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதனைதொடர்ந்து விலகப்பட்டுள்ள 7 வீரர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

மேலும் முதன்மை டிராவில் வீரர்கள் மாற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர்களின் எதிரிகளுக்கு அடுத்த சுற்றுக்கு வாக்ஓவர் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

;