புதுதில்லி:
இந்தியாவின் பிரபலமான முன்னாள் தடகள வீரர்மில்கா சிங் (வயது 91) ஜூன்18 அன்று காலமானார். அவரது மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டிவிட்டரில் பதவிட்டிருப்பதாவது:
ஒலிம்பிக் உட்பட பல பதக்கங்களை ஓட்டப் பந்தயங்களில் குவித்த பறக்கும் சீக்கியர் என அழைக்கப்பட்ட மில்கா சிங் மறைந்தார். ஆழ்ந்த அனுதாபங்கள். இந்தியாவுக்கு பெருமையை தேடி தந்தவர். என்னுடைய தலைமுறை தலைநிமிர்ந்து நின்றதற்கு மிக முக்கிய காரணமானவர். மில்காசிங் இன்றும் உத்வேகம் தருபவர்.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.