games

img

டோக்கியோ ஒலிம்பிக் ... இந்தியாவிற்கு முதல் பதக்கம்.... பளுதூக்குதல் பிரிவில் மீரா பாய் சானு வெள்ளி வென்றார்....

32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெள்ளியன்று தொடங்கியது. இந்த திருவிழா தொடங்கிய 2-வது நாளான சனியன்று இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 

மகளிர் பளுதூக்குதல் பிரிவில் (49 கிலோ)இந்திய வீராங்கனை மீரா பாய் சானு 202 கிலோ எடையை தூக்கி வெள்ளிப்பதக் கத்தை வென்று அசத்தினார். சீன வீராங் கனை ஜிஹுய் (210 புள்ளிகளுடன்) தங்கப்பதக்கத்தையும், இந்தோனேசியா வீராங் கனை கண்டிகா (194 புள்ளிகளுடன்) வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். 

வெள்ளிப்பதக்கம் வென்ற மீரா பாய் சானு (26 வயது) மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். மீரா பாய் சானுவிற்கு குடியரசுத் தலைவர்ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியபொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

;