games

img

டோக்கியோவில் ஒலிம்பிக் தீப ஓட்டம் தொடங்கியது

ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று துவங்கியது.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளையாட்டுக்கு என நடத்தப்படும் மிக பெரியப் பேட்டி ஒலிம்பிக் போட்டிகள். உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் ஒரு முறையாவது இந்த போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பது கனவாக இருக்கும்.  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நாடுகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு ஜாப்பானில் நடைபெறுகிறது.கடந்த ஆண்டு ஜப்பானில் நடத்தப்பட இருந்த ஒலிம்பிக் போட்டி  கொரோனா தொற்று பரவல் காரணமாக  ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதம் 23 முதல் ஆகஸ்ட் 8- ஆம் தேதி வரையும், பாராஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப் 5 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான தீப ஓட்டம் இன்று துவங்கியது. ஒலிம்பிக் தீபம் ஜப்பான் புகுஷிமாவில் தொடங்கி நாடு முழுவதும் உள்ள 47 இடங்கள் வழியாக 121 நாள் பயணித்து  டோக்கியோ வந்து சேரும். இந்த தீப ஓட்டத்தில் 10,000 பேர் கலந்து கொண்டு தீபத்தை ஏந்தவுள்ளனர்

;