games

img

டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் துவங்கின... இந்திய கொடியை வீரர் தேக் சந்த் ஏந்திச் சென்றார்....

டோக்கியோ:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  மாற்றுத்திறனாளிகளுக்காக பாராலிம்பிக்- 2020 போட்டிகள் ஆகஸ்ட் 24 செவ்வாயன்று கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கின.  இதில் இந்தியா சார்பில்  ஈட்டியெறிதல் வீரர் தேக் சந்த்  அணியின் முன்பாக தேசியக் கொடியை ஏந்திச்சென்றார். 

2020ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக்போட்டிகள் கொரோனாவால் ஒத்தி வைக்கப்பட்டு, சமீபத்தில்தான் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில்  நடந்து முடிந்தன. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 24 அன்று துவங்கியுள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்தியா சார்பில் 54 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளனர்.

பாராலிம்பிக்கில்,  வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், சைக்ளிங், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, துப்பாக்கி சுடுதல், சிட்டிங் கைப்பந்து, நீச்சல், டேபிள் டென்னிஸ், வீல்சேர் கூடைப்பந்து உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் நடைபெற உள்ளது.துவக்க  விழாவில் கடந்த முறை உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தேசியக் கொடியை ஏந்திச் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.அவர் டோக்கியோ செல்லும் வழியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.இந்நிலையில் துவக்க நிகழ்ச்சி அணி வகுப்பில் இந்திய ஈட்டியெறிதல் வீரர் தேக் சந்த் தேசியக் கொடியை ஏந்தி அணியின் முன்பாக சென்றார்.

;