games

img

ஒலிம்பிக் மல்யுத்தம்.... இறுதியில் ரவிக்குமார்...

ஆடவர் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் ரவிக்குமார் தனது அரையிறுதி ஆட்டத்தில் கஜகஸ்தானின் நூரிஸ்லாமை எதிர்கொண்டார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில்  நூரிஸ்லாம் 9-7 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். போட்டி நடுவரின் விக்டரி விதிப்படி 5 புள்ளிகள் கூடுதலாக பெற்ற ரவிக்குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.  ரவிக்குமார் இறுதிக்கு முன்னேறியதன் மூலம் அவருக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இறுதி ஆட்டம் வியாழனன்று நடைபெறுகிறது.  

தீபக் புனியா தோல்வி
ஆடவர் 86 கிலோ பிரிவில் இந்திய வீரர் தீபக் புனியா தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அசத்தினார். ரவிக்குமார் போலவே இறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் அமெரிக்க வீரர் டெய்லரை எதிர்கொண்ட தீபக் புனியா 0-10 என்ற புள்ளிக்கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறினார். 

;