மகளிர் குத்துச்சண்டை 64 கிலோ பிரிவில் சிறப்பாக விளையாடிவரும் இந்திய வீராங்கனை லவ்லினா அரையிறுதி வரை அசத்தலாக விளையாடி வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அரையிறுதியில் துருக்கி வீராங்கனை புஸேநாஜை எதிர்கொள்கிறார். வெற்றி பெற்றால் இறுதிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளியை வெல்லலாம். தோற்றால் வெண்கலத்துடன் வெளியேற வேண்டும். இந்தியர்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்பது கானல் நீரைப்போன்று தான்உள்ளது. வெளிநாட்டு வீரர்- வீராங்கனைகளின் கைகளில் பார்க்கிறோம். ஆனால் இந்திய வீரர் வீராங்கனைகள் கைகளில் இன்னும் பார்க்க முடியவில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் சிறப்பாக விளையாடி வரும் லவ்லினாவாவதுபெற்றது தருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.