games

img

ஒலிம்பிக் குத்துச்சண்டை... வெண்கலம் வென்றார் லவ்லினா...

டோக்கியோ:
மகளிர் குத்துச்சண்டை 64 கிலோ பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை லவ்லினா, துருக்கி வீராங்கனை புஸேனாஜை எதிர்கொண்டார். ஒலிம்பிக் தொடரின் தொடக்க சுற்று முதலே சிறப்பாக விளையாடி வரும் லவ்லினா இறுதிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் பெற்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதியில் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் துருக்கி வீராங்கனையிடம் போராடி வீழ்ந்து வெளியேறினார். குத்துச்சண்டை விதிப்படி அரையிறுதியில் வெளியேறும் நபர்களுக்கு வெண்கலப்பதக்கம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதால், டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவின் பதக்கம் வென்றோர் பட்டியலில் லவ்லினா வெண்கலத்துடன் இணைந்துள்ளார். லவ்வினாவின் வெண்கலப்பதக்கத்துடன் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக (1 வெள்ளி, 2 வெண்கலம்) உயர்ந்துள்ளது.

;