games

img

ஒலிம்பிக் பேட்மிண்டன்.... வெண்கலம் வென்றார் சிந்து....

32-வது ஒலிம்பிக் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கி யோவில் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறினார். சனியன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சீன தைபேவீராங்கனையும், முன்னாள் உலகசாம்பி யனுமான டாய் ட்ஸுங்கிடம் தோல்வியடைந்தார்.  இந்நிலையில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சிந்து - சீன வீராங்கனை ஹீ பிங்கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து 21-13, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப்பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு இது 2-வது பதக்கமாகும். பளுதூக்குதலில் பிரிவில் மீராபாய் சானு வெள்ளி  வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

;