சிந்து தனது காலிறுதி ஆட்டத்தில் ஜப்பானின் யாமகுச்சி அகேனேவை எதிர்கொள்கிறார். பேட்மிண்டன் துறையில் இருவருக்கும் ஆகாது. உலக சாம்பியன் தொடராக இருந்தாலும், சாதாரண டூர் தொடராக இருந்தாலும் இருவரும் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வார்கள். அதாவது எலியும், பூனையுமாக தான். உலக தொடர்களில் நேருக்கு நேர் கணக்கிடும் போது சிந்துவின் கை தான் ஓங்கி இருக்கும். சிந்து 11 முறையும், யாமகுச்சி 7 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இருப்பினும் உள்ளூர் மண்ணில் களமிறங்குவதால் யாமகுச்சியை சிந்து கவனமாக எதிர்கொண்டாலே வெற்றி நிச்சயம். காரணம் யாமகுச்சி திடீரென ஆட்டத்திறனை மாற்றி விளையாடக் கூடியவர். அதாவது அதிரடி ஆட்டத்தை எப்பொழுது கையிலெடுப்பார் என்பதை கணிப்பது கடினம். சிந்துவை போல ஒரே மாதிரி ஆட்டத்தை வெளிப்படுத்தமாட்டார்.