games

img

‘ஒன்றுபடுவோம், உலக அமைதிக்காக’ சர்வதேச ஒலிம்பிக் தின முழக்கம்

புதுதில்லி, ஜுன் 24- உலக அமைதிக்காக ஒன்றுபடுவோம் என்ற செய்தியுடன் வியாழனன்று (ஜுன் 23) சர்வதேச ஒலிம்பிக் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது. இது 1948 இல் தொடங்கப்பட்டது. மக்களை ஒன்றிணைத்து, விளையாட்டு மூலம் அமைதிக்காக போராடுவதுதான் ஒலிம்பிக் தினத்தின் கருத்து. கேரளத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலும் ‘ஒலிம்பிக் ஓட்டம்’ நடத்தப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடந்த கொண்டாட்டத்தில் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அர்ஜுனா விருது பெற்றவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

;