22-வது காமன்வெல்த் விளையாட்டுத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 9-வது நாளில் (சனியன்று) இந்திய வீராங்கனை பிரியங்கா 10,000 மீட்டர் தூரம் நடைப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். பந்தைய தூரத்தை 43 நிமிடம் 38 நொடிகளில் கடந்த பிரியங்கா கோஸ்வாமி, காமன்வெல்த் போட்டியின் நடைப்பந்தய பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்கிற பெருமையை பெற்று புதிய வரலாறு படைத்தார். பொதுவாக நடைபந்தயத்தில் இந்திய வீரர்- வீராங்கனைகள் ஆரவமுடன் பங்கேற்றாலும் பெரிய அளவில் சாதித்த வரலாறு கிடையாது.