games

img

டோக்கியோ நகரை மிரட்டும் கொரோனா....

கொரோனா தொற்று பதற்றத்துக்கு இடையே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் தொடர் நடைபெற்று வருகிறது. ஒலிம்பிக்  கிராமம் திறக்கும் போதே டோக்கியோ நகரில் தினசரி கொரோனா பாதிப்பு 1700 ஆக இருந்தது. 
இதனால் ஜப்பான் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஒலிம்பிக் தொடங்கும் தருணத்தில் கூட டோக்கியோ நகர் மக்கள் ஒலிம்பிக் கிராம வீதிகளில் போராட்டம் நடத்தினர். மக்களின் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் ஜப்பான் அரசு ஒலிம்பிக் தொடரை நடத்தி செவ்வாயன்றுடன் 5 நாட்களை நிறைவு செய்தது. 

இந்நிலையில் திடீரென டோக்கியோ நகரில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.திங்களன்று 1,429 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், செவ்வாயன்று  தினசரி பாதிப்பு 2,848 ஆக உயர்ந்துள்ளது. இதில் 7 பேர் ஒலிம்பிக் கிராமத்தில் இருப்பவர்கள் எனவும், அவர்களில் 4 பேர் விளையாட்டு வீரர்கள் என டோக்கியோ சுகாதார துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

;