games

img

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகும் நவோமி ஒசாகா

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகுவதாக  நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார்,

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடைபெற்று வரும் நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில்  ருமேனியா வீராங்கனை பாட்ரிசியா மரியாடிக்கை 7-4 என்ற நேர்செட்டில்  வீழ்த்தி முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒசாகா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நவோமி ஒசாகா கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். இதனையடுத்து போட்டி அமைப்பு குழுவின் விதிமுறைகளை மதிக்காமல் நடந்து கொண்டதாக அவருக்கு ரூ.11 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் மீடியாக்களை சந்திக்கும் தனது கடமையை ஒசாக்கா தொடர்ந்து தவிர்த்தால் போட்டியில் இருந்து நீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்தது.
இந்நிலையில் தற்போது அவர் பிரெஞ்ச் ஓபனிலிருந்து  விலகுவதாகவும், போட்டியில் விளையாடும் மற்ற வீரர்களுக்கு தான் கவனச்சிதறலாக இருந்துவிடக்கூடாது என்பதற்காக போட்டியில் இருந்து விலகும் முடிவை  எடுத்துள்ளதாகவும் நவோமி ஒசாகா தனது டுவிட்டர் பதிவில்  தெரிவித்துள்ளார்.

;