games

img

செஸ் ஒலிம்பியாட் பிரம்மாண்ட விழாவுடன் இன்று நிறைவு பெறுகிறது

செஸ் விளையாட்டுத் துறையில் மிக முக்கியமான தொடர் ஒலிம்பியாட் தொடராகும். இந்த தொடரின்  44-வது சீசன் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் (தொடக்க விழா - சென்னை நேரு விளையாட்டு அரங்கில்) தொடங்கியது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி நாளன்று செஸ் ஒலிம்பியாட் தொடரின் அனைத்து பிரிவுகளின் வெற்றியை நிர்ணயிக்கும் கடைசி சுற்று (11) செவ்வாயன்று நடைபெறுகிறது.  இந்த 11-வது சுற்று நிறைவு பெற்றவுடன் அன்று மதியத்திற்கு மேல் தொடக்க விழா நடைபெற்ற அதே சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நிறைவுவிழா நடைபெறுகிறது. தொடக்க விழாவை விட நிறைவு விழாவை மிகவும் பிரம்மாண்ட அளவில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வட்டமடித்து வரும் நிலையில், நிறைவு விழா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. நிறைவு விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் தொடரின் தமிழ்நாடு சார்பு அணியான சென்னை அணியின் கேப்டனுமான தோனி பங்கேற்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

;