games

img

செஸ் கிராண்ட் மாஸ்டரானார் 16 வயதான பிரணவ் வெங்கடேஷ்

சென்னை, ஆக. 7- தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான பிரணவ் வெங்கடேஷ் நாட்டின் 75ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே பல்வேறு போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் 2014ஆம் ஆண்டு தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் சாம்பியன் ஆனார். பின்னர் 2015இல் 9 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய சாம்பியன்  பட்டம் வென்றார். அதைத் தொடர்ந்து  தற்போது அவர் கிராண்ட் மாஸ்டராக வும் உயர்ந்திருக்கிறார். தமிழகத்திலிருந்து கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்தை பெரும் 27ஆவது வீரர் பிரணவ் வெங்கடேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 75 கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள நிலையில், அதில் 27 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2,500 புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 3 வீரர்களோடு தொடர்ச்சியாக வெற்றி பெற்றால் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும். 2,400 புள்ளிகளுடன் முக்கிய சர்வதேச தொடர்களில் 3 முறை பங்கேற்று, அதில் கிடைக்கும் புள்ளிகளின் அடிப்படையில் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படு கிறது. இதேபோன்று 2,700 புள்ளிகள் பெற்ற வீரர்களுக்கு சூப்பர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் கிடைக்கும் இந்தியாவில் இதுவரை 6 வீரர்கள் மட்டுமே சூப்பர் கிராண்ட் மாஸ்டர்  பட்டத்தை பெற்றுள்ளனர். தற்போது பிரணவ் வெங்கடேஷ் கிராண்ட் மாஸ்டர்  பட்டத்தை பெற்று அசத்தியிருக்கிறார்.

விஸ்வநாதன் ஆனந்த்

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடை பெற்று வருகிறது.  இந்தப் போட்டி யின் நிறைவு விழா ஆகஸ்டு 9-ம் தேதி நடக்க இருக்கிறது. இந்நிலையில், சர்வதேச செஸ் கூட்டமைப்பு  தலைவர் மற்றும் துணை தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் அர்காடி வோர்கோவிச் சர்வதேச செஸ் கூட்டமைப்பு தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு ஆதரவாக 157 ஓட்டுகள் கிடைத்தன. அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 

;