games

img

விளையாட்டு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2ஆவது இடத்தில் இந்தியா

தென் கொரியாவில் நடை பெற்ற 26ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் சனிக்கிழமை அன்று நிறைவு பெற்றது. நிறைவு நாளில் மகளிர் 3,000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் இந்தியா சார்பில் களமிறங்கிய பருல் சவுத்ரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.  இது அவருக்கு 2ஆவது வெள்ளிப் பதக்கம் ஆகும். பருல் சவுத்ரி  ஏற்கெ னவே 5,000 மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.  அதே போல ஈட்டி எறிதல் பிரிவில் சச்சின் யாதவ் இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கமும், ஓட்டப் பந்தய வீரர் அனிமேஷ் குஜூர் 200 மீ பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்று தேசிய சாதனையை முறிய டித்தார். இதன்மூலம் நிறைவு நாளின் மாலை 5 மணி நிலவரப்படி 8 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களுடன் இந்தியா 2ஆவது இடத்தில் இருந்தது. சீனா (15 தங்கம், 8 வெள்ளி,  3 வெண்கலம்) 26 பதக்கங்க ளுடன் முதலிடத்திலும், ஜப்பான் (4 தங்கம், 10 வெள்ளி,  10 வெண்கலம்) 24 பதக்கங்களுடன் 3ஆவது இடத்தி லும் இருந்தன.

இறுதிக்கு முன்னேறுவது யார்?

18ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விடுமுறை நாளான ஞாயிறன்று “குவாலிபையர் 2” ஆட்டம் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. “குவாலிபையர் 2” ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி இறுதிக்கு முன்னேறும் என்பதால், மும்பை - பஞ்சாப் அணிகள் தீவிர பயிற்சியுடன் களமிறங்குகின்றன. இதனால் இந்த ஆட்டம் மிக பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. “குவாலிபையர் 2” ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி செவ்வாயன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீஸை மிரட்டும் மழை : பிரெஞ்சு ஓபனுக்கு

சிக்கல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன் றான பிரெஞ்சு ஓபன் தொடரின் 128ஆவது சீசன் பிரான்ஸ் தலை நகர் பாரீஸில் நடை பெற்று வருகிறது. தற்போது ரவுண்ட்ஸ் சுற்று நடைபெற்று வரும் நிலையில், பாரீஸ் நகரில் பருவமழை மிரட்டி வருகிறது. உள்ளரங்க அமை ப்பு இல்லாததால் அடுத்த ஒரு வாரத்திற்கு பிரெஞ்சு ஓபன் மழையால் கடும் பாதிப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மே 4 முதல் அடுத்த ஒரு வாரம் பாரீஸ் நகரம் அதீத கனமழை யை எதிர்கொள்ளும் என்பதால், பிரெஞ்சு ஓபன் சுவாரஸ்ய மின்றி நகரவும் வாய்ப்புள்ளது.