உலக கடற்கரை விளையாட்டு இஸ்ரேலுக்கு மீண்டும் எதிர்ப்பு
ஒலிம்பிக்கிற்குப் பிறகு மூன்றாவது பெரிய விளை யாட்டு தொடரான உலக கடற்கரை விளையாட்டு தொடர் வரும் ஆகஸ்ட் 5 முதல் 15-ஆம் தேதி வரை இந்தோனே சியாவின் முக்கிய சுற்றுலா தலமான பாலியில் நடைபெற உள்ளது. சுற்றுலா தீவில் உலக கடற்கரை விளையாட்டு இதுவே முதல் முறை என்ற நிலையில், இந்த தொடரில் 1,554 விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். யு-20 உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட எதிர்ப்பை போன்று உலக கடற்கரை விளையாட்டு தொடரிலும் பங்கேற்க இஸ்ரேல் நாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஐபிஎல் - 2023
5 பந்தில் 5 சிக்ஸ் அடித்து அமர்க்களப்படுத்திய ரிங்கு சிங்
கடைசி ஓவரில் நடந்தது என்ன?
ஐபிஎல் தொடரின் 13-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - குஜராத் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணிக்கு கடைசி ஓவரில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், ரிங்கு சிங் 5 சிக்ஸர் விளாசி உதவியதால் கொல்கத்தா அணி 6 பந்துகளில் 31 ரன்கள் குவித்து பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. கொல்கத்தா அணியின் இந்த பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே பாராட்டி வரும் நிலையில், கடைசி ஓவரில் என்ன நடந்தது என்ற தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 1. கடைசி ஓவரை குஜராத் வீரர் யாஷ் தயாள் வீசினார். கடைசி ஓவரின் முதல் பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுக்க ரிங்கு சிங் பேட்டிங் களத்திற்கு வந்தார். 2. 2-வது பந்தை யாஷ் புல் டாஸாக வீச அதனை சிக்ஸருக்கு அனுப்பி ரன் கணக்கை துவங்கினார் ரிங்கு. 3. 3-வது பந்தை ஸ்டெம்பிற்குள் புகுந்து கலக்கத்தை ஏற்படும் வகையில் புல் டாஸ் கட் செய்தார் யாஷ். ஆனால் சுதாரித்துக் கொண்ட ரிங்கு, யுவராஜ் சிங் ஸ்டைலில் கட் செய்து லெக் திசையில் சிக்ஸருக்கு அனுப்பினார். 4. 4-வது பந்தை ஆப் சைடு திசையில் ஒதுக்க நினைத்து வைடு கிரீஸ் அருகே வீசினார் யாஷ். இதுவும் டாஸ் என்று அதனையும் சிக்ஸருக்கு பறக்க விட்டார் ரிங்கு சிங். 5. 5-வது பந்தை ரிவர்ஸ் பவுன்சர் முறை யில் வீச அதனை நேரடியாக சிக்ஸ ருக்கு அனுப்பினார் ரிங்கு. யாஷ் சற்று வேகமாக வீசியிருந்தால் ரிங்கு ஓரளவு திணறி இருப்பார். மெதுவாக ரிவர்ஸ் செய்ததால் பந்து சிக்ஸருக்கு பறந்தது. 6. கடைசி பந்தையும் 5-வது பந்தை போலவே விலகி வீச அதனையும் சிக்ஸருக்கு அனுப்பி பிரமிக்க வைத்தார் ரிங்கு சிங்.
புல் டாஸ் தான் காரணம்
1. 5 பந்துகளில் 28 ரன்கள் எடுக்க முடி யுமா? என்றும் ரிங்கு சிங் யாரென்றே தெரியாதே என்ற எண்ணத்தில் குஜ ராத் வீரர்கள் எவ்வித கள ஆலோச னை வியூகம் வகுக்காமல் வெறு மென கடைசி ஓவரை வீசினர்.
2. பந்திற்கும் ரன்னுக்கும் கூடுதல் விகிதம் இருந்ததால் கடைசி ஓவரை வீசிய யாஷ் மிகவும் அசால்ட்டாக இருந்தார்.
3. ரிங்கு சிங் சிக்ஸ் மழை பொழிய முதல் காரணம் யாஷ் முதல் பந்தை டாஸ் வீசியதுதான். புல் டாஸ் பந்தால் அடித்த சிக்ஸரால் ரிங்கு சிங் உத்வே கம் பெற்று அடுத்து கிடைத்த 2 புல் டாஸ் பந்துகளையும் சிக்சருக்கு அனுப்பினார். 3 பந்துகள் அடுத்தடு த்து புல் டாஸ் வீசியதுதான் மிகப்பெ ரிய தவறாக அமைந்து விட்டது.
ஒரே இரவில் ஸ்டார் ஆன ரிங்கு சிங்
1997-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் கேஸ் சிலிண்டர் வியாபாரியின் 5 குழந்தைகளில் ஒருவராக பிறந்தவர் ரிங்கு சிங் (25). சிறு வயதில் பள்ளி முடித்து வீட்டிற்கு வந்ததும் தந்தைக்கு உதவியாக கேஸ் சிலிண்டர்களை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே கொண்டு போய் டெலிவரி செய்யும் வேலையை செய்து, கடின முயற்சிக்கு பின் உத்தரப்பிரதேச அணிக்கு முதல்தரக் கிரிக்கெட்டை ஆடினார். தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியுள்ளார். 2018-ஆம் ஆண்டு கொல்கத்தா அணி 80 லட்ச ரூபாய்க்கு இவரை வாங்கிய பிறகு கூட ரிங்குவை கிரிக்கெட் உலகிற்கு தெரியாது.ஞாயிறன்று 5 சிக்ஸ் அடித்த பின்புதான் ரிங்கு சிங்கை வெளியுலகிற்கு முதன் முறையாக தெரியவந்தது. அதுவும் ஒரே இரவில் ஸ்டார் ஆகிவிட்டார் ரிங்கு.
இன்றைய ஆட்டம்
தில்லி - மும்பை
இடம்: தில்லி நேரம் : இரவு 7:30
(சேனல் : தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மொழி வரிசைகள், ஒடிடி - ஜியோ சினிமா)