மகளிர் டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு
9ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் 3 அன்று ஐக்கிய அரபு அமீர கத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக் கான 15 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பிசிசிஐ செவ்வாயன்று அறிவித்தது. வீராங்கனைகள் விபரம் :
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யாஸ்திகா பாட்டியா (விக்கெட் கீப்பர்), பூஜா வஸ்தி ராகர், அருந்ததி, ரேணுகா சிங், தயாளன் ஹேமலதா, ஆஷா சோபனா, ராதா, ஸ்ரேயங்கா மற்றும் சஜனா சஜீவன்.
கூடுதல் வீராங்கனைகள் : உமா சேத்ரி (விக்கெட் கீப்பர்), தனுஜா கன்வர் மற்றும் சைமா. (காயம் ஏற்பட்டால் மட்டுமே சேர்க்கப்படுவார்கள்)
ஆடவர் அணியைப் போன்றே மகளிர் கிரிக்கெட் உலகிலும் இந்திய மகளிர் அணி நட்சத்திர அணியாக உள்ளது. ஆனால் ஒரு முறை கூட இந்திய மகளிர் அணி டி-20 உலகக் கோப்பையை வென்ற தில்லை.
கடந்த 8 சீசனிலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் 9ஆவது சீசன் மகளிர் டி-20 உலகக்கோ ப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லுமா? என்ற ஆவல் ரசிகர்க ளிடையே தற்பொழுதே முளைத்துள்ளது.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்
ஜோகோவிச், சபலென்கா அபாரம்
கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் தொடரின் 144ஆவது சீசன் நியூயார்க் நகரில் ஆகஸ்ட் 26 அன்று தொடங்கியது.
இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் உல கத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தரவரிசையில் இல்லாத மால்டோவா வீரர் ஆல்பாட்டை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-2, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டவாது சுற்றுக்கு முன்னேறினார்.
அதே போல மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ள பெலாரசின் சபலென்கா, தரவரி சையில் இல்லாத ஆஸ்திரேலியா வின் பிரிசில்லாவை எதிர்கொண்டார்.
தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தின் மூலம் பிரிசில்லாவை 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி சபலென்கா இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
எனக்கு கேப்டன் பொறுப்பு வேண்டாம்
ஓட்டம் பிடித்த கே.எல்.ராகுல்
இந்திய கிரிக்கெட் உலகில் அதிரடிக்கு பெயர் பெற்ற நட்சத்திர பேட்டரும், பிரபல விக்கெட் கீப்பருமான கே.எல்.ராகுல் 2024 ஐபி எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெய ன்ட்ஸ் அணியின் கேப்டனாக செயல் பட்டார்.
அப்பொழுது ஒரு போட்டியில் ஏற்பட்ட படுதோல்விக்காக, லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல்.ராகுலை மைதான த்திலேயே வைத்து கடுமையாக வசைபாடினார். இந்த விவகாரம் பெரிய சர்ச்சையாக வெடித்த நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை விட்டே கே.எல்.ராகுல் விலகப் போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்த தகவல் வெளியானவுடன் மிரண்டு போன லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா 2 நாட்களுக்கு முன் கே.எல்.ராகுலை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பொழுது கே.எல்.ராகுல் சஞ்சீவ் கோயங்காவிடம், “கேப்டன் பதவியில் இருந்து விலக உள்ளேன். உங்களது விருப்பத்தின் பேரில் பேட்ட ராக ஆக மட்டும் விளையாட விரும்பு கிறேன்” எனக் கூறி இருக்கிறார்.
இதை சஞ்சீவ் கோயங்கா ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியாகி யுள்ள நிலையில், லக்னோ அணியின் அடுத்த கேப்டனாக நிக்கோலஸ் பூரன் (மேற்கு இந்தியத் தீவுகள்) அல்லது க்ருனால் பாண்டியா (இந்தியா) ஆகிய இருவர்களில் யாராவது ஒருவரை கேப்டனாக நியமிக்க லக்னோ அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.