பாரம்பரியமிக்க கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் வெள்ளியன்று அரை யிறுதி ஆட்டங்கள் நடைபெறு கிறது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிர்ஜியோஸை எதிர்கொள் கிறார் முன்னணி வீரரும், ஸ்பெயின் நாட்டவருமான நடால். 2-வது அரையிறுதி ஆட் டத்தில் டென்னிஸ் உலகின் முதல் நிலை வீரரும், அதிரடி நாயக னுமான ஜோகோவிச் (செர்பியா), உள்ளூர் நாயகன் நோரியை (பிரிட்டன்) எதிர்கொள் கிறார். அரையிறுதி ஆட்டங்கள் இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
யாருக்கு வெற்றி?
ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை யிறுதி ஆட்டங்களில் நடால், ஜோகோவிச் வெற்றி பெறுவார்கள், இறுதிக்கு முன்னேறுவார்கள் என்பதை எளிதாக கணித்து விடலாம். ஆனால் இரண்டு பேரும் எதிர்கொள்ளும் போட்டியாளர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஆஸ்திரேலிய வீரர் கிர்ஜியோஸ் ஒரு இடத்தில் நின்று ஒரே மாதிரியாக ஆட மாட்டார். துறுதுறுவென ஓடிக்கொண்டு பந்தை வித்தியாசமாக திருப்பக்கூடியவர். இதுதான் கிர்ஜியோசின் பிளஸ் பாயிண்ட். இவரிடம் கவனமாக விளை யாடினால் தான் நடால் இறுதிக்கு முன்னேற முடியும். இதே போல பிரிட்டனின் நோரி டென்னிஸ் விளையாட்டில் மாரத்தான் போட்டியை நடத்தக் கூடியவர். அதாவது மணிக்கணக்கில் போராடி வெற்றியை ருசிக்கக்கூடியவர். ஒரு புள்ளியைக்கூட விட்டுக் கொடுக்க பலமாக யோசிப்பார். ஜோகோவிச் கழுகு பார்வையுடன் கண் காணித்தால் இறுதிக்கு முன்னேறலாம். ஒரு செட்டிலும் அசந்தால் கூட டை பிரேக்கர் வரை சிரமப்பட வேண்டி இருக்கும்.