இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 ஆட்டத் தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டி குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் வெள்ளியன்று நடைபெறுகிறது. ஒயிட் வாஷ் செய்யும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் என இரு அணிகளும் வெற்றியின் மீது குறியாக களமிறங்குவதால் கடைசி ஒருநாள் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடம் : அகமதாபாத்
நேரம் : மதியம் 1:30 மணி
புரோ கபடி
இன்றைய ஆட்டங்கள்
ஹரியானா-புனே (இரவு 7:30) / பெங்களூரு-ஜெய்ப்பூர் (இரவு 8:30)
உத்தரப்பிரதேசம் - குஜராத் (இரவு 9:30)
3 ஆட்டங்களும் பெங்களூருவில் நடைபெறுகிறது