நடப்பாண்டிற்கான பாரம்பரியமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், 3-வது டெஸ்ட் போட்டி பாக்சிங் டே (கிறிஸ்து மஸ் தினத்தையொட்டி நடைபெறும் ஆட்டம்) என்ற பெயரில் மெல்போர்னில் ஞாயிறன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி வழக்கம் போல ஆஸ்தி ரேலியாவின் மிரட்டலான பந்துவீச்சை சமாளிக்க முடியமால் கடுமையாக திணறியது. ஸ்டார்க்(2 விக்.,) - கம்மின்ஸ் (3 விக்.,) ஆகியோரின் வேகமும், லயனின் (3 விக்.,) சுழலால் இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை சின்னாபின்னமானது. கேப்டன் ரூட் (50) மற்றும் பேர்ஸ்டோ (35) ஆகியோர் போராடினர். மற்ற வீரர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 65.1 ஓவர்களில் 185 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் அட்டா நேர முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 (16 ஓவர்களில்) எடுத்தது.