games

img

கிரிக்கெட் விதிமுறைகளில் மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலாகிறது

கிரிக்கெட் விளையாட்டில் விதிமுறைகளை உருவாக்கும் அமைப்பான எம்சிசி (மேரிலேபோன் கிரிக்கெட் கிளப்) இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு  வருகிறது. புதிய விதிகள், உருவாக்குதல் விதிகளுக்கான கோரிக்கைகளை பரிசீலித்தல், விதிகளை நீக்குதல் என அனைத்தையும்  எம்சிசி தான் கண்காணிக்கும். இந்நிலையில், நடப்பாண்டில் எம்சிசி 5 புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த விதிகள் வரும் அக்டோபர் மாதம் அமலுக்கு வருகின்றன. 

அதன் விவரங்கள்:

கேட்ச் முறையில் ஆட்டமிழக்கும் பொழுது, நடுவர் கிரிஸ் பகுதியில் இருக்கும்  பேட்டர் எதிர்முனைக்கு சென்றால் அந்த பேட்டர் புதிய பந்தை (பந்துவீச்சை) எதிர்கொள்ளும்படி விதிகள் இருந்தன. ஆனால் புதிய விதிமுறைப்படி புதிய பேட்டர் தான் அடுத்தப் பந்தை எதிர்கொள்ள வேண்டும். ஓவரின் கடைசிப் பந்தில் ஒரு பேட்டர் ஆட்டமிழந்தால் மட்டுமே மறுமுனையில் உள்ள பேட்டர், அடுத்த ஓவரின் ஆரம்பத்தில் முதல் பந்தை இனி எதிர்கொள்ள முடியும், நடுவர் முனையில் உள்ள பேட்டர் பந்துவீச்சாளர் பந்துவீசும் முன்பே, கிரீஸை விட்டு வெளியேறினால் விதிமுறைகளின்படி அவரை ரன் அவுட் (மன்கட் முறை) செய்ய முடியும். இதன்மூலம் வரும் சிக்கலை எதிர்கொள்ள விதிமுறை 38 (ரன் அவுட்) மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மன்கட் முறை நேர்மறையற்ற ஆட்டம் என்கிற பிரிவில் விதிமுறை 41-ல் இடம்பெற்றிருந்தது. பந்துவீச்சாளர்கள் பந்தின் மீது உமிழ்நீரைத் தடவி பந்தை ஸ்விங் செய்ய முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உமிழ்நீரை பந்தின் மீது தடவக்கூடாது என புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. பந்துவீசும் பொழுது ஃபீல்டர் தேவையில்லாமல் நகர்ந்தால் அது டெட் பால் என அழைக்கப்படும். இதனால் பேட்டர் அடிக்கும் ரன்கள் வீணாகிவிடுகின்றன. இனி ஃபீல்டர் தேவையில்லாமல் நகர்ந்தால் 5 ரன்கள்  பேட்டிங் செய்யும் அணிக்கு வழங்கப்படும். 

அஸ்வினின் போராட்டத்துக்கு வெற்றி 

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் ராஜஸ்தான் பேட்டர் பட்லரை (இங்கிலாந்து) மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட  அஸ்வின் மன்கட் முறைக்கு ஆதரவாக கடுமையாக போராடினார். எம்சிசி கொண்டுவந்துள்ள புதிய விதிமுறையில் மன்கட் முறை சேர்க்கப்பட்டுள்ளது. இது அஸ்வினின் நீண்ட காலப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகும். 

 

மகளிர் உலகக்கோப்பை 

இன்றைய ஆட்டம் 
நியூசிலாந்து - இந்தியா 
இடம் : ஹாமில்டன், நியூசிலாந்து
நேரம் : காலை 6:30 (இந்திய நேரப்படி)