games

img

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் 

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்குத் தொடங்குகிறது. முதலாவது ஆட்டம் டிரா ஆன நிலையில் 2வது போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், 2வது ஆட்டத்தில் வென்றது போல இந்த போட்டியிலும் வென்று தொடரில் முன்னிலை பெற இந்திய அணி முயற்சிக்கும் அதேநேரத்தில், தொடரைத் தக்கவைக்க இங்கிலாந்து வீரர்களும் போராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த டெஸ்ட் தொடரிலும் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. இங்கிலாந்தைப் பொறுத்தவரையில், அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ள சிப்லிக்குப் பதில், டேவிட் மலானும், காயமடைந்துள்ள வேகப்பந்து வீச்சாளருக்குப் பதில் கிரேக் ஒவர்டானும் விளையாடுகின்றனர்.

;