games

img

டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடக்கவிக்கும் டி 20 உலகக் கோப்பை போட்டிக்கு ஒவ்வொரு அணிகளுக்கும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி என ஐசிசி தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நாடக்கவிக்கும் டி 20 உலகக் கோப்பை போட்டி அக்கோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்காற்றுகின்றனர். இதில் 8 அணிகள் ஏற்கனவே தேர்ச்சிபெற்றுவிட்ட நிலையில். 4 அணிகள் தகுதிச் சுற்றுப் போட்டிகளின் அடிப்படையில் இறுதிப் பட்டியலில் இடம்பெறும். 

கொரோனா சூழல் காரணமாக ஒவ்வொரு அணியும் "பயோ பபுள்" பாதுகாப்பு நடைமுறையை கடைப்பிடிக்க இருக்கிறது. இதன் காரணமாக ஐசிசி சில விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி ஒவ்வொரு அணியும் 15 வீரர்கள், 8 நிர்வாகிகளுடன் மட்டுமே வர வேண்டும். இந்தத் தொடரில் சூப்பர் 12 மற்றும் முதல் சுற்று ஆட்டங்களில் விளையாட உள்ள அணிகளின் பட்டியலை ஏற்கெனவே வெளியிட்டது ஐசிசி. அதன்படி குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

குரூப் 1 இல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன. குரூப் 2வில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் உள்ளன. 

முதலில் இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்த சூழலில் கொரோனா பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

;