games

img

சையத் முஸ்தாக் அலி கோப்பை : இறுதிப்போட்டியில் நாளை களம் காணும் தமிழ்நாடு - கர்நாடக அணிகள் 

சையத் முஸ்தாக் அலி கோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு மற்றும் கர்நாடக அணிகள் பலப்பரீட்சை செய்கின்றனர். 

டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றிபெற்றது. அதேபோல் மற்றொரு அரையிறுதியில் விதர்பா அணியைக் கர்நாடகா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இவ்விரு அணிகளும் தலா 2 முறை சையத் முஸ்தாக் அலி கோப்பையை வென்றுள்ளன. 

இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட கடைசி 5 போட்டிகளில் நான்கில் கர்நாடக அணி வெற்றி பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடக வென்றது. இருப்பினும் நடப்பு சாம்பியனாக உள்ள தமிழ்நாடு அணி 3 ஆவது முறையாகக் கோப்பையை வெல்லும் முனைப்பில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

;