games

img

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரில் சாம் கரன் இல்லை

இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணியில் சாம் கரன் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக சாம் கரன் இங்கிலாந்திலிருந்து அகமதாபாத்துக்கு வருவதில் சிக்கல் இருப்பதாக கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கின்றது. இதனால் சாம் கரன் இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் தெரிவிக்கின்றது.

இதுகுறித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தகவல்கள் கூறுகையில் 
இலங்கை அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் விளையாடிய சாம் கரனுக்கு தொடர் முடிந்தவுடன் ஓய்வு அளிக்கப்பட்டது. திட்டமிட்டபடி இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிகளில் விளையாட சாம் கரன் வந்திருக்க வேண்டும். ஆனால், பிரிட்டனில் இருந்து அகமதாபாத்துக்கு நேரடியாக வர எந்த விமானங்களும் இல்லை. தனி விமான மூலம் சாம் கரனை அழைத்துவரும் சூழலும் இல்லை.
கொரோனா காரணமாக மற்ற பயணிகள் வரும் விமானத்தில் சாம் கரன் வந்தால் தொற்று ஏற்படும் அபாயம்  உள்ளது. ஆதலால் வரும் 26-ம் தேதிக்குள் இங்கிலாந்து ஒரு அணியில் வேண்டுமானால் சாம் கரன் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புள்ளது " எனத் தெரிவித்துள்ளது.

;