games

img

விளையாட்டு செய்திகள்

தரம்சாலா டெஸ்ட் 
ரோகித், கில் அபார சதம் : இந்திய அணி ரன்கள் குவிப்பு

இந்தியா - இங்கிலாந்து அணி களுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இமாச்சலப்பிரதேச மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத்தல நகரமான தரம்சாலாவில் வியாழ னன்று தொடங்கியது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய வீரர்கள் குல்தீப் யாதவ் (5), அஸ்வின் (4) ஆகியோரின் சுழலை சமாளிக்க முடியாமல் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க வீரர் கிராவ்லி 79 ரன்கள் எடுத்த நிலை யில், தொடர்ந்து தனது முதல் இன்னி ங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதான வேகத்தில் ரன் குவித்தது. 

சிறப்பாக தொடக்கம் அமைத்து கொடுத்த ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ரோகித் சர்மா - சப்மன் கில் ஜோடி தரம்சாலா மைதானத்தில் நங்கூரம் அமைத்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை புரட்டியெடுத்தது. 

இந்த ஜோடியை கழற்ற இங்கி லாந்து பந்துவீச்சாளர்கள் வியூகம் அமைத்தும் பலனளிக்காத நிலையில், ரோகித் சர்மா மற்றும் சப்மன் கில் ஆகிய இருவரும் அடுத்தடுத்து சத மடித்து அசத்தினர். இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் மற்றும் சப்மன் கில்லுக்கு இது இரண்டாவது சதம் என்ற நிலையில், சதமடித்த அடுத்த சில நிமிடங்களில் ரோகித் (103), கில் (110) ஆகிய இரு வரும் ஆட்டமிழக்க அடுத்து கள மிறங்கிய தேவதத் பட்டிக்கல் (65), சர்பிராஸ் கான் (56) ஆகியோர் நிதான வேகத்தில் ரன் குவித்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து வீரர்களை பாடாய்ப்படுத்தும் சர்பிராஸ், ஜுரல்

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் சர்பிராஸ் கான், துருவ் ஜுரல் ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்கள். துருவ் ஜுரல் விக்கெட் கீப்பராக உள்ள நிலை யில், சுறுசுறுப்பாக இருப்பதால் சர்பிராஸ் கானை பேட்டிங் ஸ்லிப் இடத்தில் ரோகித் சர்மா பீல்டிங் நிற்க வைப்பார். 

இருவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பணியை சிறப்பாக கையாண்டாலும், பந்துவீசாத நேரங்களில் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள். இருவரும் கோவிலைச் பக்தர்கள் சுற்றுவது போல ஸ்டம்பை சுற்றிக்கொண்டே இருப்பார்கள். இதுபோக இருவரும் இந்தியில் எதையாவது பேசிக் கொண்டே இருப்பார்கள். இதனை வியூகம் என்று இங்கிலாந்து கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் வியூகம் இல்லை, சாதாரண பேச்சுவழக்குதான். 

இவர்கள் செய்யும் சேட்டைகளை இங்கிலாந்து பேட்டர்கள் கவனித்துக்கொள்ளவே நேரம் இருக்காது என்ற நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு தலை விட சர்பிராஸ் கான், துருவ் ஜுரலின் சேட்டைகளால் இங்கிலாந்து வீரர்கள் படாதபாடு படுகிறார்கள்.

தில்லி
டபிள்யு.பி.எல் தொடர்  : திணறும் நடுவர்கள்

டபிள்யு.பி.எல் (WPL - Women’s Premier League) டி-20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் தில்லியில் நடைபெற்று வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம்தர நடுவர்கள் டபிள்யு.பி.எல் போட்டிகளை கவனித்து வரும் நிலையில், விக்கெட் முடிவுகளில் மிக மோசமான அளவில் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. 

சாதாரணமாக கணிக்கக் கூடிய எல்.பி.டபிள்யு முறைகளை கூட தவறான முடிவுகளை அளித்து நடுவர்கள் சொதப்பி வருகின்றனர். டி-20 லீக் போட்டிகளில் டிஆர்எஸ் அப்பிலுக்கு குறைந்த வாய்ப்புகளே உள்ள நிலையில், நடுவர்களின் சொதப்பலான செயல்பாடு  டபிள்யு.பி.எல் தொடர் முக்கிய சர்ச்சை பொருளாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டம்
மும்பை - குஜராத்
(16-ஆவது லீக் ஆட்டம்)
நேரம் : மாலை 7:30 மணி
இடம் : தில்லி மைதானம்
சேனல் : ஸ்போர்ட்ஸ் 18, 
ஜியோ சினிமா (ஒடிடி)