games

img

ஐசிசி யு-19 உலகக்கோப்பை – ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்த நிவேதன் ராதாகிருஷ்ணன்  

ஐசிசி உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட நிவேதன் ராதாகிருஷ்ணன் இடம்பிடித்துள்ளார்.  

ஐசிசி யு-19 கிரிக்கெட் உலகக் கோப்பை என்பது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் சர்வதேச கிரிக்கெட் போட்டியாகும். 1988 இல் இளைஞர் உலகக் கோப்பையாக முதலில் போட்டியிட்டது. அதன்பின்னர், உலகக் கோப்பை ஐசிசியால் நடத்தப்படும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக நடத்தப்படுகிறது. பிப்ரவரி 9,2020 அன்று நடைபெற்ற இறுதிபோட்டியில் இந்தியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்காளதேசம் வெற்றி பெற்றது.  அதனை தொடர்ந்து ஜனவரி 14 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் யு-19 உலகக்கோப்பை போட்டி நடைபெறுகிறது. இந்த அணியில் 19 வயது நிவேதன் ராதாகிருஷ்ணன் என்கிற தமிழர் இடம்பிடித்துள்ளார்.  

சென்னையைச் சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன், 10 வயது முதல் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா அணிக்காக விளையாடி வருகிறார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியில் இருமுறை பங்கேற்றுள்ள நிவேதன், ஐபிஎல் 2021 போட்டியில் தில்லி அணியில் இடம்பெற்றார். மேலும் இரு கைகளிலும் பந்துவீசும் திறமை கொண்டவர். நிவேதன் ராதாகிருஷ்ணன் ஆஸ்திரேலிய அணியின் யு.19 உலகக்கோப்பை அணியில் இடம்பிடித்துள்ளார். 

;