மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் : நாளை தொடக்கம்
களிமண் தரையில் நடைபெறும் முக்கிய சர்வதேச டென்னிஸ் தொடரான மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடர் பிரான்ஸ் நாட்டில் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது. 10-ஆம் தேதி வரை குவாலிபயர் சுற்றுகள் நடைபெற உள்ள நிலையில், 11-ஆம் தேதி பிரதான ரவுண்ட் சுற்றுகள் தொடங்குகிறது.
ஐபிஎல் - 2023
அதிகரிக்கும் கொரோனா தொற்று வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை
நாட்டில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 25,587 பேர் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ள நிலையில், தமிழ்நாடு, ஹரி யானா, கேரளா உள்ளிட்ட மாநிலங் களில் முககவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிப்பால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 10 ஐபிஎல் அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள் குழுவை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கு மாறு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் வெளியான தகவலில், “கொரோனா பாதிப்பு அதிகரித்து வரு வதால் கவலைப்பட ஒன்று மில்லை என்றாலும், கொரோனா வழி காட்டுதல்களைப் பின்பற்றுமாறு வீரர்களையும், பயிற்சியாளர்கள் குழு வையும், உதவி ஊழியர்களையும் அறிவுறுத்தியுள்ளோம். வீரர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மிக முக்கியம் என்பதால் அரசின் வழி காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் - லக்னோ
இடம்: எகான மைதானம்,லக்னோ நேரம் : இரவு 7:30
(சேனல் : தொலைக்காட்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
மொழி வரிசைகள்,
ஒடிடி - ஜியோ சினிமா)
கவலை ஏற்படுத்தும் காயம்
16-வது சீசன் ஐபிஎல் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வீரர்களுக்கு அதிகமாக காயம் ஏற்பட்டு வருகிறது. தொடர் ஆரம்பித்து 7 நாட்கள் கூட ஆகாத நிலையில், 5-க்கும் மேற்பட்ட முக்கிய வீரர்கள் காயத்தில் சிக்கியுள்ளனர். குஜ ராத் வீரர் வில்லியம்சன், ரஜாத் பட்டிதார் (பெங்களூரு), ரீசி டோப்ளே (பெங் களூரு), ராஜ்பக்சே (பஞ்சாப்), பட்லர் (ராஜஸ் தான்) ஆகிய நட்சத்திர வீரர்கள் காய மடைந்துள்ளனர். இதில் வில்லியம்சன் தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். லேசான காயத்தால் பெரும்பாலான வீரர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புற்கள் மீது எழும் சந்தேகம் மைதானம் பளபளப்பாக தெரிய வேண்டும் என்பதற்காக அதிகளவில் தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது. அதிகளவு தண்ணீரால் புற்கள் அளவுக்கு அதிகமாக இருப்பது போன்று உள்ளது. புற்கள் அதிகம் இருந்தால் ஓடுவதற்கு சற்று சிரமமாக இருக்கும். புரியும்படி சொன்னால் வழுக்கி விடும். வீரர்களுக்கு ஏற்படும் காயத்திற்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
பின்வரிசை வீரர்களை தொடக்கத்தில் இறக்குவதா?
8-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி நிர்ணயித்த 198 ரன் களை துரத்திய ராஜஸ்தான் அணி, தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - ஆர்.அஸ்வினை களமிறக்கியது. அஸ்வின் ஆல்ரவுண்டர் என்றாலும் அதிரடி வீரர் கிடையாது. பின்வரிசையில் களமிறங்கும் மந்தமான பேட்டிங் திறன் கொண்டவர். கிட்டத்தட்ட டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்கு ஏற்ப விளையாடும் திறனை பெற்றுள்ள அஸ்வினை, பட்லருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக களமிறக்கினார் ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன். சஞ்சு சாம்சனின் அதிரடி முடிவு, அஸ்வின் தொடக்க வீரராக களமிறங்கி யது ஐபிஎல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் 4 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாமல் தங்க முட்டையுடன் வெளியேறினார். துடிப்பு முக்கியம் காரணம் தொடக்க ஓவர்களில் எதிரணி பந்துவீச்சாளர்கள் தாக்கு தல் பாணியை தொடங்குவார்கள். முதல் 4 ஓவர்களை புயல் வேகத்தில் வீசுவார்கள். நல்ல அதிரடி திறன் இருந்தால் மட்டுமே டி-20 போட்டிகளின் தொடக்க ஓவர்களை எதிர்கொள்ள முடியும். இதில் பவர்பிளே வாய்ப்பும் உள்ளதால் ரன் குவிக்கக்கூடிய துடிப்பான வீரர்களே டி-20 போட்டிகளில் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். ஹெட் மேயர், தேவ்தத் பட்டிக்கல் போன்ற பேட்டிங் ஆர்டர் வீரர்கள் இருப்பினும் அஸ்வினை களமிறக்கியது சர்ச்சை பொருளாக மாறியுள்ளது.