games

img

ஜடேஜா அபாரம் : 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் 4 டெஸ்ட், 3  ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கிறது.  இந்த சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்வான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட  டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழனன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் ஷமி - சிராஜ் வேகக் கூட்டணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி, தொடர்ந்து ஜடேஜா (5 விக்.,) - அஸ்வின் (3 விக். ) சுழல் கூட்டணியிடம் சீட்டுக்கட்டாய் சிதறியது.  லபுஸ்சாக்னே (49), ஸ்மித் (37), ஹேண்ட்ஸ்கோம்ப் (31), அலெக்ஸ் (36) ஆகியோர்  மட்டுமே இரட்டை இலக்கத்தை தாண்டினர். மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதானமாக விளை யாடியது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. ரோஹித் சர்மா (56) அஸ்வின் (0) ஆகியோர் களத்தில் உள்ளனர். வெள்ளியன்று தொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

2-ஆம் நாள் ஆட்டம்
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : காலை 9:30 மணி
இடம் : விதர்பா மைதானம், நாக்பூர்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்