games

img

ஐபிஎல் போட்டிகள் ரத்து....

ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாகவும், ஒரு வாரம் காலம் கழித்து மீண்டும் நடைபெறும் என்றும்  பிசிசிஐ தலைவர்ராஜீவ் சுக்லா  தெரிவித்து உள்ளார்.இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்த தருணத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனம் எழுந்தன. இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட  ஐபிஎல்கிரிக்கெட் வீரர்களும் தொற் றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றுஅதிகரிப்பால்  ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என்று நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், நடப்பு சீசன் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யபடுகிறது. ஐபிஎல் போட்டிகள் வேறு பகுதிகளுக்கு மாற்றப்படும்.  அதற்கான அனுமதிகிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு ள்ளதால், தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. ஒரு வார காலத்திற்கு பிறகு மீண்டும் தொடங்கி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

;