games

img

ஐபிஎல் : ஹைதராபாத் வீரர் நடராஜனுக்கு கொரோனா... 

துபாய் 
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 2-ஆம் சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. 

இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் தில்லி - ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று காலை இரு அணி வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் ஹைதராபாத் அணியின்  வேகப்பந்துவீச்சாளரும், தமிழக வீரருமான நடராஜனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் அவருடன் தொடரில் இருந்த விஜய் சங்கர் (ஹைதராபாத் - ஆல்ரவுண்டர்), விஜயகுமார் (மேலாளர்), ஷியாம் சுந்தர் (பிசியோ), அஞ்சனா வன்னா (மருத்துவர்), துஷார் மேக்தர் (லாஜிஸ்டிக்ஸ் மேலாளர்), கணேசன் (வலைப்பந்துவீச்சாளர்) ஆகியோர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளர். மற்ற இரு அணி வீரர்களுக்கு கொரோன இல்லை என்பதால் இன்று இரவு 7:30 மணிக்கு வழக்கம் போல தில்லி - ஹைதராபாத் ஆட்டம் நடைபெறும்.          

;