games

img

விளையாட்டு செய்திகள்

ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா இந்தியா?
இன்று அமெரிக்காவுடன் மோதல்

9ஆவது சீசன் உலகக்கோப்பை டி-20 தொடர் மேற்கு இந்தியத் தீவுகள் - அமெரிக்கா நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், புதனன்று இரவு 8 மணியளவில் “குரூப் ஏ” பிரி வில் இடம்பெற்றுள்ள இந்தியா -  அமெரிக்கா அணிகள் மோதும் 25 ஆவது லீக் ஆட்டம், அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க்கில் நடை பெறுகிறது. முன்னாள் சாம்பியனான இந்திய அணி முதலிரண்டு லீக் ஆட்டங்களில் (அயர்லாந்து, பாகிஸ்தான்) வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலை யில், ஹாட்ரிக் வெற்றியை ருசிக்கும் முனைப்பில் தனது 3ஆவது லீக் ஆட்டத் தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. அதே போல கிரிக்கெட் விளை யாட்டில் போதுமான அளவு பின்புலம் இல்லையென்றாலும், வெளிநாட்டு வம்சாவளி வீரர்கள் மற்றும் கரடு முரடான மைதான நிலைமையை சாதகமாக பயன்படுத்தி போட்டி நடத்தும் அமெரிக்கா, தான் விளை யாடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 3ஆவது ஹாட்ரிக் வெற்றி கனவுடன் இந்திய அணியை எதிர்த்து அமெரிக்கா களமிறங்குகிறது. 

இந்தியா - அமெரிக்கா என இரு அணிகளும் ஹாட்ரிக் முனைப்பில் களமிறங்குவதால் இந்த ஆட்டம் பரபரப்பாக நடைபெறும் என எதிர் பார்க்கப்படுகிறது.

இன்றைய ஆட்டங்கள்

ஆஸ்திரேலியா - நமீபியா
இடம் : பார்படாஸ், 
மேற்கு இந்தியத் தீவுகள்
நேரம் : காலை 6 மணி

இந்தியா - அமெரிக்கா
இடம் : நியூயார்க், அமெரிக்கா
நேரம் : இரவு 8 மணி
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார் (ஒடிடி)

இனவெறி மோதலை தூண்டிவிட்ட ரசிகர்களுக்கு சிறைத்தண்டனை
ஸ்பெயின் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த மே 21,  2023 அன்று ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரான வாலன் சியாவில் உள்ள மெஸ் டல்லா  மைதானத் தில் லா லிகா கிளப் தொடரின் ரியல் மாட்ரிட் - வாலன்சியா அணிகளுக்கு இடை யேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் வீரர் வின்சியஸ் ஜூனியரை (கருப்பினத்தைச் சேர்ந்த பிரேசில் வீரர்) வாலன்சியா ரசிகர்கள் 3 பேர் குரங்கு சத்தத்தை எழுப்பி இனவெறி மோதலை தூண்டிவிட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு மற்ற மைதானங்களில் நடைபெற்ற ஆட்டங்களிலும் வின்சியஸ் ஜூனியரை ரசிகர்கள் இனவெறி கருத்துடன் கிண்டல் செய்ய தொடங்கினர். இந்த இனவெறி சம்பவத்திற்கு பிரேசில் அரசு நேரடியாக கண்டனம் தெரிவித்து, விளக்கம் அளிக்கக்கோரி ஸ்பெயின் அரசிற்கு நோட்டீஸ் அனுப்பியது. 

பிரேசில் அரசின் ராஜாங்க ரீதியிலான அழுத்தத்தால் துரித விசாரணை மேற்கொண்ட ஸ்பெயின் போலீசார் 3 பேரையும் கைது செய்து, குற்றப்பத்திரிக்கை தயாரித்து வாலன்சியா நீதிமன்றத்திடம் ஒப்படைத்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக திங்களன்று (அந்நாட்டு நேரப்படி) தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பில்,”இனவெறி மோதலை தூண்டிவிட்ட வாலன்சியா ரசிகர்கள் 3 பேருக்கு 8 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது” என கூறப்பட்டுள் ளது. இந்த தீர்ப்பிற்கு வின்சியஸ் ஜூனியர் உள்ளிட்ட அனைத்து நாட்டு கால்பந்து ரசிகர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.