games

img

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: 2வது இன்னிங்சில் இந்தியா திணறல்  

கான்பூர் டெஸ்ட் போட்டியின் 4வது நாளான இன்று இந்திய கிரிக்கெட் அணி தனது 2வது இன்னிங்சை தொடங்கி தடுமாறி வருகிறது.  

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூர் க்ரீன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 345 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன் பின் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து 296 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.  மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 49 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது.

இந்நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இந்திய அணி கடும் சரிவை சந்தித்து திணறி வருகிறது. புஜாரா (22 ரன்கள்), கேப்டன் ரகானே (4 ரன்கள்), மயங்க் அகர்வால் (17 ரன்கள்) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். தற்போதைய நிலவரப்படி 29 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸ்வின் 20 ரன்களுடனும் களத்தில் ஆடி வருகின்றனர். 

;