games

img

இந்தியா அபார வெற்றி தொடரை கைப்பற்றி சாதனை!

இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்ற இங்கிலாந்து க்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்தியா இன் னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தி யுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் டெஸ்ட் தொ டரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது இந்தியா.

முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி அஸ்வின், குல்தீப் ஆகியோ ரின் சுழலில் சிக்கி 218 ரன்க ளில் சுருண்டது. பிறகு, மட் டையை சுழற்றிய இந்திய வீரர்கள் 477 ரன்கள் விளா சித் தள்ளினர். கேப்டன் ரோகித், சுப்மன் கில் ஆகி யோர் சதம் அடித்தனர். அறிமுக வீரர் தேவ் படிக்கல் முதல் ஆட்டத்திலேயே அரை சதம் எடுத்தார்.

ஆண்டர்சன் 700
இந்த போட்டியில் 2 விக் கெட்டை வீழ்த்தியதன் மூலம் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் 700 விக் கெட்டுகளை சாய்த்தார். இதன் மூலம் வேகப் பந்து வீச்சில் அதிக விக்கெட் எடுத்த இங்கிலாந்தின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போ ட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதன் பிறகு, நடந்த நான்கு போட்டிகளையும் இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக வென்று 4-1 என்ற கணக் கில் கைப்பற்றினர்.

முன்னதாக, 1912 ஆம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலி யா - இங்கிலாந்து எதிரான தொடரில் இங்கிலாந்து அணி இதே சாதனையை படைத்திருந்தது. அதன் பின்னர் 112 ஆண்டுகளு க்குப் பிறகு இந்திய அணி  அந்த சாதனையை நிகழ்த்தி யுள்ளது. 

அஸ்வின் சாதனை!
259 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து, இந்திய சுழற் பந்து வீச்சாளர் அஸ்வின் சூழலில் மீண்டும் சிக்கி சிதைந்தது. வரிசையாக 5 விக்கெட்டை கைப்பற்றி னார். இதனால் 5 நாட்கள் ஆட்டம் மூன்று நாட்களி லேயே முடிந்தது. 100  ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய அஸ்வின் மொத்தம் 9 விக்கெட்டு களை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றிக்கு துணை நின்றார்.

வீரர்களுக்கு ஜாக்பாட்!
இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சரித்திர வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு ஊக்கத் தொகையை பிசிசிஐ உயர்த்தியுள்ளது. அதன்படி, ஒரு ஆண்டில் 75 சதவீத போட்டிகளில் விளை யாடினால் அதிகபட்சம் ரூ.45 லட்சம். பிளேயிங்லெ வனில் இல்லாவிட்டால் ரூ.22.5 லட்சம் 50 சதவீத போட்டிகளில் விளையாடி னால் ரூ.30 லட்சம் பிளேயிங் லெவனில் இல்லாவிட்டால் ரூ.15 லட்சம் ஊக்கத் தொகையாக கிடைக்கும்.